Kathir News
Begin typing your search above and press return to search.

வேலைக்கு செல்லும் சிறுபான்மை சமூக பெண்களின் சக்தி அதிகரிப்பு: புள்ளி விபரங்கள் கூறுவது என்ன?

வேலைக்கு செல்லும் சிறுபான்மை சமூக பெண்களின் சக்தி அதிகரிப்பு: புள்ளி விபரங்கள் கூறுவது என்ன?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  10 March 2025 10:47 PM IST

2021-22 -ம் ஆண்டில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் நடத்திய காலமுறை தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பின்படி, அகில இந்திய தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தின் மதிப்பீடுகள் – மக்கள் தொகையில் தொழிலாளர் சக்தியில் உள்ள நபர்களின் சதவீதமாக வரையறுக்கப் படுகிறது. 2022-23 மற்றும் 2023-24 ஆகிய ஆண்டுகளில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் தொழிலாளிகளாகச் சேர்வது படிப்படியாக அதிகரிப்பதைக் காட்டுகின்றன.


2014-15-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட கல்வி பயிலுங்கள் மற்றும் வருவாய் ஈட்டுங்கள் திட்டம், சிறுபான்மை இளைஞர்களின் கல்வித் தகுதி, நிலவும் பொருளாதார போக்குகள் மற்றும் சந்தை வாய்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து பல்வேறு நவீன, பாரம்பரிய திறன்களில் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும். இத்திட்டத்தின் கீழ், 2.69 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சி பெற்றனர். இது மொத்த பயனாளிகளில் 57.64% ஆகும்.

உஸ்தாத் திட்டம் 2015-ல் தொடங்கப்பட்டது. முதன்மை கைவினைஞர்கள், கைவினைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் பாரம்பரிய திறன்களை மேம்படுத்துவதை இத்திட்டம் இலக்காகக் கொண்டது. இத்திட்டத்தின் கீழ், 19,255 பெண்கள் பயிற்சி பெற்றனர், இது மொத்த பயனாளிகளில் 89.10% ஆகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News