Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ்நாட்டுக்கு வருகைதந்த மத்திய அரசின் திட்ட கண்காணிப்பு குழு: எதற்கு தெரியுமா?

தமிழ்நாட்டுக்கு வருகைதந்த மத்திய அரசின் திட்ட கண்காணிப்பு குழு: எதற்கு தெரியுமா?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  11 March 2025 9:38 PM IST

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் திட்ட கண்காணிப்புக் குழு ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் மிகப் பெரும் உள்கட்டமைப்பு திட்டங்களில் உள்ள முக்கியமான சவால்களை மதிப்பாய்வு செய்தது. இந்த அமர்வின் போது, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், மொத்த திட்ட செலவு ரூ.10,396 கோடிக்கு மேல் உள்ள ஐந்து திட்டங்கள் உட்பட 15 முக்கிய திட்டங்களில் 25 பிரச்சினைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். குறிப்பாக, இரு மாநிலங்களிலும் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழக மருத்துவமனைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன.


இந்த மருத்துவமனைகள் காப்பீடு செய்யப்பட்ட குடிமக்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு சிறப்பு சிகிச்சைகள், மருந்துகள் மற்றும் மருத்துவமனையில் சேர்ப்பது உள்ளிட்ட அத்தியாவசிய சுகாதார நன்மைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.மதிப்பாய்வின் கீழ் உள்ள மற்றொரு முக்கிய திட்டம் ரிலையன்ஸ் ஜியோவின் 5G/ 4G சேவை விரிவாக்க முயற்சியாகும். மாநில அரசுகளுடன் இணைந்து வனம் மற்றும் வன உயிரின பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து விவாதங்கள் நடைபெற்றன.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாத பகுதிகளில் 5ஜி சேவையை விரிவு படுத்துவதையும், தற்போதுள்ள 4ஜி உள்கட்டமைப்பை மேம் படுத்துவதையும், குறிப்பாக சியாச்சின் உள்ளிட்ட தொலைதூர மற்றும் சவாலான பிராந்தியங்களில் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் முதன்மை பொருளாதார ஆலோசகர் திரு பிரவீன் மஹ்தோ தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் திட்ட ஆதரவாளர்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News