Kathir News
Begin typing your search above and press return to search.

மேக் இன் இந்தியா திட்டம்: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி!

மேக் இன் இந்தியா திட்டம்: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  14 March 2025 11:19 PM IST

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை, மற்றொரு உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் இலகு ரக போர் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. வானில் இருந்து 100 கி.மீ. தொலைவுக்கு மேல் பாய்ந்து வானில் உள்ள இலக்கைத் தாக் கும்வல்லமை கொண்ட அஸ்திரா ஏவுகணை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டதாகும்.

இந்த ஏவுகணையில் மேம்பட்ட வழிகாட்டுதல் மற்றும் வழி செலுத்துதல் அமைப்பு முறைகள் உள்ளன. இவை, இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கி அழிப்பதை உறுதி செய்கின்றன. ஏற்கெனவே இந்திய விமானப் படையில் இணைக்கப் பட்டுள்ள இந்த ஏவுகணைகள், வெவ்வேறு போர் விமானங்களில் இருந்து செலுத்தும் வகையில் மேம்படுத் தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தேஜஸ் எல்சிஏ போர் விமானத்தில் பயன்படுத்தக் கூடிய அஸ்திரா ஏவுகணையின் பரிசோதனை, ஒடி ஸாவின் சந்திப்பூர் கடல்பகுதியில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News