Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல்: ஐ.நா கூட்டத்தின் முக்கிய முடிவுகள்!

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல்: ஐ.நா கூட்டத்தின் முக்கிய முடிவுகள்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  5 May 2025 11:20 PM IST

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று கூடுகிறது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பின்னணி கொண்ட பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொன்றனர். உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து, பாகிஸ்தானுடனான உறவை முற்றிலுமாக துண்டித்தது இந்தியா.


குறிப்பாக, வான்வழி மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனால், இரு நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று கூடுகிறது. இந்தக் கூட்டத்தில், இருநாடுகளும் தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவின் ஆக்ரோஷமான நடவடிக்கை மற்றும் சிந்துநதி ஒப்பந்தம் ரத்து உள்ளிட்டவை தொடர்பாக பாகிஸ்தான் புகார் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News