தமிழகத்தில் போர்க்கால ஒத்திகை அறிவித்த மத்திய அரசு: என்ன செய்யணும் தெரியுமா?

இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக உலக நாடுகள் இடையே இதன் பிரச்சனை வலுவாக நிலவில் வரும் சூழ்நிலையில், போருக்கான அனைத்து அறிகுறிகளும் தென்படுகிறது. மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.தமிழகத்தில் 4 இடங்களில் நாளை போர்க்கால ஒத்திகை நடக்கிறது.பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இருநாடுகளும் ராணுவ படைகளை தயார் நிலையில் வைத்திருக்கும் நிலையில், நாடு தழுவிய போர்க்கால ஒத்திகை மே 7 நடத்துமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.இந்த நிலையில், தமிழகத்தில் 4 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடத்தப்படுகிறது. கல்பாக்கம், மீனம்பாக்கம், ஆவடி, மணலி ஆகிய 4 இடங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.
போர் பதற்ற சூழலின் போது பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வும் இதில் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. குறிப்பாக போர் ஏற்படும்பொழுது, மக்களை எப்படி பாதுகாப்பது, பதற்றமான சூழலில் மக்களை எப்படி வெளியேற்றுவது, தாக்குதலில் இருந்து எவ்வாறு தப்பித்துக் கொள்வது உள்ளிட்ட ஒத்திகைகள் நடத்தப்படும். இதற்கு முன்னர் இந்தியாவில் 1971 ஆம் ஆண்டு போர்க்கால ஒத்திகை நடைபெற்றது. அதன் பிறகு தற்பொழுது 54 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் மே 7 போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.