Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம்: அமெரிக்கா சொன்ன ஒரே வார்த்தை?

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம்: அமெரிக்கா சொன்ன ஒரே வார்த்தை?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  6 May 2025 10:43 PM IST

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு முழு ஆதரவை அளிப்பதாக அமெரிக்க பார்லிமென்ட் சபாநாயகர் மைக் ஜான்சன் உறுதியளித்தார். ஐக்கிய நாடுகள் சபை கூட்டம் நடைபெற்றது இதில் அமெரிக்க சார்பாக பங்கேற்ற பார்லிமென்ட் சபாநாயகர் அமெரிக்கா சார்பாக தன்னுடைய முழு ஆதரவையும் இந்தியாவிற்கு அளிப்பதாக தெரிவித்தார்.


பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா கடுமையாக்கியுள்ள நிலையில், அமெரிக்க பார்லிமென்ட் சபாநாயகர் மைக் ஜான்சன் கூறும் போது, "இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக நிற்க வேண்டும். அந்த முயற்சிகளை ஆதரிக்க அனைத்தையும் செய்வோம்.

இந்தியாவுடன் நட்பு உறவு அமெரிக்காவிற்கு இப்போது முக்கியம் என்றும், குறிப்பாக இந்தியாவின் கடினமான காலங்களில் அவர்களுடன் உறுதுணையாக இருப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்வோம் என்றும் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் முடிவு எடுத்து இருப்பதாக அவர் அறிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News