தற்கொலை டிரோன்களை அனுப்பிய பாகிஸ்தான்:முறியடித்த இந்திய ராணுவம்!

இந்தியா பாகிஸ்தானிடையே போர் பதற்றம் மேலும் அதிகமாகி கொண்டே வருகிற நிலையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் காஷ்மீர் மீது தற்கொலை டிரோன்களை பயன்படுத்தி தாக்க முயன்றதை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது
காஷ்மீர் பஹல்காமில் நடந்த தாக்குதலை தொடர்ந்து ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது இதனால் பாகிஸ்தான் பதிலடி கொடுக்கப் போவதாக கூறியுள்ளது அதற்காகவே நேற்று 15 இந்திய நகரங்களை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணைகளை வீசி உள்ளது அதையும் நமது ராணுவம் இடைமறித்து அழித்துள்ளது
அதனைத் தொடர்ந்து மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் இன்று இரவு தற்கொலைச் டிரோன்களை பயன்படுத்தி, ஜம்மு விமான நிலையம் சுஞ்சுவன் ராணுவ தளம்ல சம்பா தேசிய நெடுஞ்சாலை ஆர்னியா ராணுவ தளம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சித்தது
ஆனால் இந்திய ராணுவம் இந்த அபாயத்தை மக்களுக்கு உடனடியாக உணர்த்தும் விதமாக ஏர் சயின்களை ஒழித்து காஷ்மீரின் உதம்பூர் மற்றும் அக்னூர் பகுதியிலும் பாகிஸ்தானின் டிரோன்களை சுட்டு வீழ்த்தியது அதோடு எஸ் 400 மற்றும் ஆகாஷ் வான் பாதுகாப்பு கவச அமைப்புகள் மூலம் பாகிஸ்தானின் தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது