Kathir News
Begin typing your search above and press return to search.

ஜம்மு பொதுமக்களை குறி வைத்த பாகிஸ்தான் டிரோன்கள்:முறியடித்த இந்தியா!

ஜம்மு பொதுமக்களை குறி வைத்த பாகிஸ்தான் டிரோன்கள்:முறியடித்த இந்தியா!
X

SushmithaBy : Sushmitha

  |  9 May 2025 6:53 PM IST

பாகிஸ்தானின் முயற்சி முறியடிக்கப்பட்டது என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்

பாகிஸ்தான் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஜம்மு முதல் ஜெய் சால்மர் வரையிலான எல்லை பகுதிகளில் வீசியது அதனை இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி தாக்குதல் முயற்சியை முறியடித்துள்ளனர் இதனை அடுத்து ஜம்முவின் முதல்வர் உமர் அப்துல்லா நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டு பாகிஸ்தானின் ஏவுகணைகளால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து பேசினார்

பிறகு பத்திரிக்கையாளரிடம் பேசிய ஜம்மு முதல்வர் ஜம்முவில் உள்ள பொதுமக்களை குறி வைத்து பாகிஸ்தான் டிரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது அதனை நமது இந்திய பாதுகாப்பு படைகள் விரைவாகவும் திறமையாகவும் செயல்பட்டு அதை முறியடித்தது இந்த சூழ்நிலையும் பதற்றமும் இந்தியாவால் உருவாக்கப்படவில்லை பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலாலே உச்சூழலை ஏற்பட்டுள்ளது இருபுறமும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News