வங்கி சேவைகளில் இடையூறு ஏற்படக்கூடாது:உத்தரவிட்ட நிர்மலா சீதாராமன்!

இந்தியா பாகிஸ்தானிடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு வங்கி சேவைகளில் எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என மத்தியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார்
அதாவது இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் அதிகமாகி உள்ள நிலையில் வங்கி துறைகளில் செயல்பாடுகள் பற்றி பொது துறை மற்றும் தனியார் வங்கிகளின் அதிகாரிகளுடன் மத்தியில் நிதி அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார் அதில் எந்த சூழ்நிலையிலும் எதிர்கொள்ள அனைத்து வங்கிகளும் தயாராக இருக்க வேண்டும் பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு வங்கி மற்றும் நிதிச் சேவையில் எந்த இடையூறும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்
அதோடு மக்களுக்கு நேரடியாக வங்கி சேவையும் டிஜிட்டல் சேவைகளும் கிடைக்க செய்வதோடு ஏடிஎம்களில் போதிய பணம் இருக்க வேண்டும் யுபிஐ மற்றும் இணையதள சேவைகளும் தங்கு தடையின்றி தொடர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார் அதுமட்டுமின்றி எல்லையோரங்களில் உள்ள வங்கிகளின் பணியாளர்கள் ஊழியர்களின் பாதுகாப்பு பற்றி கவலை தெரிவித்த நிதி அமைச்சர் அவர்களின் பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்