Kathir News
Begin typing your search above and press return to search.

எந்தவொரு பயங்கரவாத செயலையும் இந்தியா மன்னிக்காது: போர் நடவடிக்கையாக கருதப்படும்!

எந்தவொரு பயங்கரவாத செயலையும் இந்தியா மன்னிக்காது: போர் நடவடிக்கையாக கருதப்படும்!
X

SushmithaBy : Sushmitha

  |  10 May 2025 9:53 PM IST

இந்தியா பாகிஸ்தான் இடையே நிகழ்ந்து வந்த போர் நடவடிக்கைகள் இன்று மாலை 5 மணி அளவில் நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் மே 12ஆம் தேதி இருநாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகவும் வெளியுறவுச் செயலாளர் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் எதிர்காலத்தில் நிகழும் எந்தவித பயங்கரவாத செயலும் இந்தியாவுக்கு எதிரான போர்ச் செயலாக கருதப்படும் என்றும் அதற்கேற்ற பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியா முடிவு செய்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது

இன்று பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் ஆலோசனைகள் கூட்டம் நடைபெற்றது அதில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பாதுகாப்பு படை தலைவர் முப்படைகளின் தளபதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்

இந்தியாவில் கிட்டத்தட்ட 26 இடங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதற்கு இந்தியா பதிலளிக்கும் விதமாக இன்று அதிகாலை பாகிஸ்தானின் நான்கு விமானப்படை தளங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு பிறகு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது அந்தக் கூட்டத்தில் தான் எதிர்காலத்தில் நிகழும் எந்த ஒரு பயங்கரவாத செயலும் இந்தியாவிற்கு எதிரான ஓர் செயலாக கருதப்படும் என்றும் அதற்கான பதிலடியை இந்தியா கொடுக்கும் என்றும் அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News