Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய விமானநிலையங்களில் துருக்கி நிறுவனம் செயல்படும் அனுமதியை நிறுத்திய மத்திய அரசு!

இந்திய விமானநிலையங்களில் துருக்கி நிறுவனம் செயல்படும் அனுமதியை நிறுத்திய மத்திய அரசு!
X

SushmithaBy : Sushmitha

  |  15 May 2025 9:08 PM IST

இந்திய விமான நிலையங்களில் செயல்பட்ட துருக்கி நிறுவனத்திற்கான பாதுகாப்பு அனுமதியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது

சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் இந்தியா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு டிரோன்களை துருக்கி வழங்கியதோடு அதனை இயக்குவதற்கும் பணியாளர்களை அனுப்பி வைத்துள்ளது இதனை இந்திய ராணுவத்தினர் உறுதி செய்தனர் துருக்கியில் இந்த செயல் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு கோபத்தையும் ஏற்படுத்தியது இதனால் பூனே வியாபாரிகள் துருக்கியின் ஆப்பிள்கள் வாங்குவதை புறக்கணித்தனர் மேலும் இந்திய கல்வி நிறுவனங்கள் அந்த நாட்டுடன் ஆன ஒப்பந்தத்தையும் ரத்து செய்து வருகின்றனர்

மேலும் அங்கு சுற்றுலா செல்போனின் எண்ணிக்கையின் தற்போது குறைந்துள்ளது இந்த நிலையில் இந்தியாவில் டெல்லியில் உள்ள ஒன்பது விமான நிலையங்களில் முக்கியமான சில பணிகளை துருக்கியை சேர்ந்த செலிபி நிறுவனம் இந்திய அரசின் அனுமதியோடு செயல்பட்டு வந்தது ஆனால் தற்பொழுது செலிபி நிறுவனத்தின் அனுமதியை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது

அதாவது நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செலிபி நிறுவனத்திற்கு அழைக்கப்பட்ட பாதுகாப்பு ஒப்புதலை உடனடியாக திரும்பப் பெறுகிறோம் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News