Kathir News
Begin typing your search above and press return to search.

ஆபரேஷன் சிந்தூர்: ராணுவ வீரர்களின் மனவலிமையை பாராட்டிய முப்படைத்தளபதி!

ஆபரேஷன் சிந்தூர்: ராணுவ வீரர்களின் மனவலிமையை பாராட்டிய முப்படைத்தளபதி!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  19 May 2025 10:38 PM IST

ஆயுதப் படைகளின் மன உறுதியை அதிகரிக்கும் வகையில், முப்படைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த சூரத்கர் ராணுவ நிலையம் மற்றும் நாலியா விமானப்படை நிலையத்திற்கு வருகை புரிந்தார். வளர்ந்து வரும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் மீள்தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அவர் துருப்புக்களுடன் உரையாடினார்.

வீரர்களின் செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் உயர் மன உறுதியைப் பாராட்டிய அவர், எதிர்கால அச்சுறுத்தல்களுக்கு திறம்பட பதிலளிக்கும் அவர்களின் திறனில் நம்பிக்கையை வெளிப்படுத்தினார். முப்படைத் தளபதியுடன் தென்மேற்கு மண்டலத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மன்ஜிந்தர் சிங், தென்மேற்கு விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர் ஆகியோர் இருந்தனர். ஆபரேஷன் சிந்தூரின் போது வீரர்கள் காட்டிய முன்மாதிரியான துணிச்சலை அங்கீகரிக்கும் வகையில் இந்த வருகை பெருமைக்குரிய உணர்வு நிரம்பியதாக இருந்தது. இந்த நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட சமீபத்திய மற்றும் வலுவான வான் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டது. இந்த வருகையின் போது மூத்த ராணுவத் தளபதிகளுடன் ஜெனரல் சவுகான் விவாதங்களையும் நடத்தினார்.


நடவடிக்கையின் சுறுசுறுப்பான கட்டத்தில் வீரர்களின் அபாரமான வீரம் மற்றும் தொழில்முறைத் தன்மையை ஜெனரல் சவுகான் பாராட்டினார். மேற்கத்திய எதிரியின் பாதுகாப்பை மீறும் பல முயற்சிகளை முறியடிப்பதில் அவர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு, உறுதியான தைரியம் ஆகியவற்றைப் பாராட்டினார். அவர்கள் ராணுவ தொழில்முறையின் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துவதாகக் கூறினார். எந்தவொரு சவாலுக்கும் தீர்க்கமான சக்தியுடன் பதிலளிக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தை ஜெனரல் சவுகான் வலியுறுத்தினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News