Kathir News
Begin typing your search above and press return to search.

ஆபரேஷன் சிந்தூர்: இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் ட்ரோன்கள்!

ஆபரேஷன் சிந்தூர்: இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் ட்ரோன்கள்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  28 May 2025 8:54 PM IST

பாகிஸ்தான், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்திய வான்வெளியில் தரம் குறைந்த மலிவான ட்ரோன்களைப் பயன்படுத்தியது. இந்த ட்ரோன்கள், சீனாவிலும், துருக்கியிலும் இருந்து பெறப்பட்டவை. இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு, இவைகளை இந்தியா சுட்டு வீழ்த்தி உள்ளது. பாகிஸ்தான், தனது ராணுவத் தளங்கள், ரேடார் நிலையங்கள், வெடிமருந்து கிடங்குகள் மற்றும் ஹேங்கர்கள் உள்ளிட்ட முக்கிய இராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.

இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு, பாகிஸ்தான் ட்ரோன்களை வீழ்த்தி, இந்திய ராணுவ தளங்களை பாதுகாத்தது. பாகிஸ்தான், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ட்ரோன் தாக்குதல்களுடன், ரஷ்யாவிலிருந்து பெறப்பட்ட Harpy ட்ரோன்களையும் பயன்படுத்தியது.ஆபரேஷன் சிந்தூர்: இது இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு எதிராக நடத்திய ஒரு இராணுவ நடவடிக்கை. இதில் 36 இடங்களில் சுமார் 300 முதல் 400 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

பாகிஸ்தான் பயன்படுத்திய ட்ரோன்கள்: பாகிஸ்தான் துருக்கி மற்றும் சீனாவில் இருந்து ட்ரோன்களை இறக்குமதி செய்து, அவற்றை இந்தியா மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தியது.இந்திய பாதுகாப்புப் படை கைனடிக் (kinetic) மற்றும் நான் கைனடிக் (non-kinetic) முறைகளைப் பயன்படுத்தி ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது. மேலும், பாகிஸ்தானில் உள்ள நான்கு வான் பாதுகாப்பு தளங்கள் மீது ஆயுதமேந்திய ட்ரோன்கள் ஏவப்பட்டு, பாகிஸ்தானின் ஏடி ரேடாரை அழித்தது. பயங்கரவாத தாக்குதல்: ஆபரேஷன் சிந்தூர் மூலம் பல குடும்பங்களை அழித்த பயங்கரவாதிகள் தண்டித்தப்பட்டனர், என்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News