Kathir News
Begin typing your search above and press return to search.

உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் பாலம்: வரலாற்று மைல்கல் சாதனை!

உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் பாலம்: வரலாற்று மைல்கல் சாதனை!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  6 Jun 2025 11:02 PM IST

ஜம்மு-காஷ்மீரில் மேம்பட்ட இணைப்பை ஏற்படுத்த ₹46,000 கோடி மதிப்பிலான தொலைநோக்குப் பார்வை கொண்ட முக்கிய திட்டங்களை பிரதமர் கோடிட்டுக் காட்டினார். பிரதமரின் வருகைக்கு முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் செனாப் பாலத்தில் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். ஜம்மு & காஷ்மீரில் மேம்படுத்தப்பட்ட இணைப்புக்கான ₹46,000 கோடி மதிப்பிலான தொலைநோக்குப் பார்வை கொண்ட முக்கிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி கோடிட்டுக் காட்டியுள்ளார், இவை பிராந்திய இணைப்பில் ஒரு வரலாற்று மைல்கல்லாகும்.


பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு முன்னதாக, ஜம்மு & காஷ்மீரின் முதலமைச்சர், உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் பாலத்தில் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். செனாப் ரயில் பாலம், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான இணைப்பை மேம்படுத்தும் என்று திரு. மோடி குறிப்பிட்டார். உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்புத் திட்டம் அனைத்து வானிலைக்கும் ஏற்ற இணைப்பை உறுதி செய்யும் என்றும், ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கத்ரா மற்றும் ஸ்ரீநகர் இடையே வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்துவது ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்துவதுடன், வேலை வாய்ப்பை உருவாக்கும் என்றும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் வெளியிட்ட தொடர் பதிவுகளுக்கு பதிலளித்து பிரதமர் குறிப்பிட்டதாவது, "ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எனது சகோதர, சகோதரிகளுக்கு நாளை, ஜூன் 6 ஆம் தேதி ஒரு சிறப்புமிக்க நாளாகும். ரூ.46,000 கோடி மதிப்புள்ள முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் தொடங்கிவைக்கப்படவுள்ளன, இவை மக்களின் வாழ்க்கையில் மிகவும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். கட்டிடக்கலையின் அசாதாரண சாதனையாக இருப்பதோடு, செனாப் ரயில் பாலம், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான இணைப்பை மேம்படுத்தும். சவாலான சூழலில் இந்தியாவின் முதல் கடல்வழி ரயில் பாலமாக அஞ்சி பாலம் உயர்ந்து நிற்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News