Kathir News
Begin typing your search above and press return to search.

சர்வதேச யோகா தினத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம்: மத்திய அமைச்சர் ஆய்வு!

சர்வதேச யோகா தினத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம்: மத்திய அமைச்சர் ஆய்வு!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  17 Jun 2025 8:05 PM IST

சர்வதேச யோகா தினத்திற்கான ஏற்பாடுகளை மத்திய பழங்குடியினர் நல அமைச்சர் ஜுவல் ஓரம் ஆய்வு செய்தார். தில்லியில் நடைபெற்ற சர்வதேச யோகா தினத்தின் 10வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கான அமைச்சகத்தின் தயார்நிலை குறித்து ஆய்வு செய்வதற்கான உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்திற்கு அமைச்சர் தலைமை தாங்கினார்.


2025 ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினத்தை உள்ளடக்கிய மற்றும் சமூகம் சார்ந்த கொண்டாட்டங்களின் அவசியத்தை ஜுவல் ஓரம் வலியுறுத்தினார். இந்த ஆண்டு பழங்குடியினர் பகுதிகளில் கொண்டாடப்படும் இந்த கொண்டாட்டம், நவீன யோகாவுடன் பழங்குடி மக்களின் நல்வாழ்வு நடைமுறைகளின் தனித்துவமான ஒருங்கிணைப்பை எடுத்துக்காட்டும் என்றும் அவர் கூறினார். யோகா செயல் விளக்கங்கள், நல்வாழ்வு அமர்வுகள் மற்றும் கடைக்கோடி பகுதியிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பழங்குடி சமூகங்களின் தீவிர பங்கேற்பை திரு ஓரம் ஊக்குவித்தார்.

யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய மத்திய அமைச்சர், அது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல, உடல், மனம் மற்றும் ஆன்மாவிற்கு இடையிலான நல்லிணக்கத்திற்கான ஒரு வழிமுறை என்றும் கூறினார். இயற்கையுடனும் பாரம்பரிய சிகிச்சை முறைகளுடனும் ஆழமான தொடர்பைக் கொண்ட பழங்குடி சமூகங்கள், இந்த நல்லிணக்கத்தை வெளிப்படுத்துகின்றன என்று அவர் கூறினார். இந்த ஆண்டு யோகா தினம் நவீன மற்றும் உள்நாட்டு நல்வாழ்வு முறைகளின் கொண்டாட்டமாக மாறுவதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, 477 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1.4 லட்சம் மாணவர்களும், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின குடிமக்களும் சர்வதேச யோகா தினத்தின் அமர்வுகள் மற்றும் தொடர்புடைய செயல்பாடுகளில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News