இனி திப்பு சுல்தான் கிடையாது - உடையார் எக்ஸ்பிரஸ், அதிரடியாக பெயர் மாற்றம் செய்த ரயில்வே
மைசூர் பெங்களூர் இடையே இயக்கப்படும் திப்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயரை உடையார் எக்ஸ்பிரஸ் என ரயில்வே நிர்வாகம் அதிரடியாக மாற்றம் செய்துள்ளது.
By : Mohan Raj
மைசூர் பெங்களூர் இடையே இயக்கப்படும் திப்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயரை உடையார் எக்ஸ்பிரஸ் என ரயில்வே நிர்வாகம் அதிரடியாக மாற்றம் செய்துள்ளது.
தற்போது பெங்களூர்-மைசூர் இடையே திப்பு எக்ஸ்பிரஸ் ஏக்கப்பட்டு வருகிறது. 1980-ல் இருந்து மைசூர் பெங்களூர் இடையே இந்த ரயில் சேவை இயங்கி வருகிறது, இந்த ரயிலின் பெயரை உடையார் எக்ஸ்பிரஸ் என மாற்ற வேண்டும் என மைசூர் எம்.பி பிரதாப் சிங்கா உள்ளிட்ட பா.ஜ.க'வினர் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் பிரதாப் சிம்ஹா எம்.பி மத்திய ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதினார் இதை மத்திய ரயில்வே அமைச்சகம் ஏற்றுக் கொண்டது. அதன்படி பெங்களூர்.மைசூர் இடையே இயங்கிய திப்பு எக்ஸ்பிரஸ் ரயில் பெயர் 'உடையார் எக்ஸ்பிரஸ்' ரயில் என மாற்றம் செய்யப்பட்டது. இந்த பெயர் மாற்றம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது இந்நிலையில் இது குறித்து சர்ச்சை கருத்துக்கள் ஆங்காங்கே எழுந்த வண்ணம் உள்ளது.