Kathir News
Begin typing your search above and press return to search.

தேசிய கல்விக் கொள்கையை நேரடியாக யாரும் எதிர்க்கவில்லை - மத்திய மந்திரி சுபாஷ்சர்கார்

தேசிய கல்விக் கொள்கையை நேரடியாக யாரும் எதிர்க்கவில்லை என்று மத்திய கல்வித்துறை இணைமந்திரி சுபாஷ் சர்க்கார் கூறினார்.

தேசிய கல்விக் கொள்கையை நேரடியாக யாரும் எதிர்க்கவில்லை - மத்திய மந்திரி சுபாஷ்சர்கார்

KarthigaBy : Karthiga

  |  2 Nov 2022 12:15 PM GMT

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை நாடு முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய கல்விக் கொள்கையில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன . தமிழகத்தில் கேந்திர வித்யாலயா பள்ளிகள் மற்றும் தமிழக அரசு பள்ளிகள் உள்ளிட்ட அனைத்திலும் அவை சிறப்பாக பின்பற்றப்பட்டு வருகிறது. நாட்டில் எந்த மாநிலமும் புதிய தேசிய கல்விக் கொள்கையை நேரடியாக எதிர்க்கவில்லை. அதே சமயம் அவை குறித்த மாநில அரசின் கருத்துக்களை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளனர். புதிய கல்விக் கொள்கைப்படி புதிய பாடத்திட்டத்தை மத்திய அரசு தயார் செய்து அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ளது.


பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிப்பதில் உள்ள வழக்கமான நெறிமுறைகளை தான் பின்பற்ற வேண்டும். அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் கவர்னர் தான் வேந்தர் என்பதால் அவருக்கே அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசு தேடுதல் குழு அமைத்து தேர்வு செய்பவர்களில் இருந்து துணைவேந்தரை கவர்னர் நியமிப்பார். இதில் அரசியல் கிடையாது. அனைத்து மாநிலங்களிலும் மாவட்டத்திற்கு ஒரு நவோதயா பள்ளி செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலும் நவோதயா பள்ளிகள் தொடங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்து இட ஒதுக்கி தந்தால் உடனடியாக தொடங்க மத்திய அரசு தயாராக உள்ளது.மத்திய பல்கலைக்கழகத்தின் கிளை திருச்சியில் தொடங்குவதற்கு தமிழக அரசு உரிய இடம் ஒதுக்கி தந்தால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க 20 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. குறிப்பாக திருச்சி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க உறுதியாக வெற்றி பெறும் இவ்வாறு அவர் கூறினார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News