Kathir News
Begin typing your search above and press return to search.

யாராலும் பிரதமர் மோடியின் தலைமுடியைக் கூட தொட முடியாது -லாலு பிரசாத் யாதவ் மீது ஸ்மிருதி இராணி தாக்கு!

பிரதமர் மோடியை குடும்பம் இல்லாதவர் என்று விமர்சித்த லாலு பிரசாத் யாதவ் கருத்திற்கு மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

யாராலும் பிரதமர் மோடியின் தலைமுடியைக் கூட தொட முடியாது -லாலு பிரசாத் யாதவ் மீது ஸ்மிருதி இராணி தாக்கு!

KarthigaBy : Karthiga

  |  6 March 2024 10:59 AM GMT

பீகார் முன்னாள் முதல் மந்திரியும் ராஷ்ட்ரிய ஜனதா தளகட்சியின் மூத்த தலைவருமான லாலு பிரசாத் யாதவ் பிரதமர் மோடியை குடும்பம் இல்லாதவர் என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் சமூக வலைதள பக்கத்தில் தங்களது சுயவிவர குறிப்பில் 'மோடி குடும்பம் ' என சேர்த்துள்ளனர் .மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி கடுமையாக தாக்கி பேசியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பாரதிய ஜனதா ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது :-


பிரதமர் மோடி இந்தியாவுக்காக உழைத்து வருகிறார். ஆனால் இந்தியா கூட்டணியில் உள்ள ஒரு கட்சியை சேர்ந்த தீவனத்திருடர் பிரதமர் மோடிக்கு குடும்பம் எதுவும் இல்லை என கூறியுள்ளார். நான் அவரிடம் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் நாங்கள் எல்லாம் மோடியின் குடும்பம். 140 இந்தியர்களும் பிரதமர் மோடியின் குடும்பம். யாராலும் அவரது தலை முடியை கூட தொட முடியாது .இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


SOURCE :Dinaseithi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News