Kathir News
Begin typing your search above and press return to search.

உள்ளாட்சித்தேர்தலில் இது வரை ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 778 பேர் மனுத்தாக்கல்!

உள்ளாட்சித்தேர்தலில் இது வரை ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 778 பேர் மனுத்தாக்கல்!

உள்ளாட்சித்தேர்தலில் இது வரை ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 778 பேர் மனுத்தாக்கல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Dec 2019 11:29 AM GMT


தமிழக உள்ளாட்சித்தேர்தலில் இதுவரை உள்ளாட்சி தேர்தலில் சென்ற 9-ம் தேதி தொடங்கி நேற்று வரை 1 லட்சத்து 9 ஆயிரம் பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் சென்ற 9-ம் தேதி தொடங்கியது. மனுத் தாக்கல் செய்ய 16-ம் தேதி கடைசி நாள் ஆகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 17-ம் தேதி வரை நடைபெறும். வேட்பு மனு வாபஸ் தேதி டிச.19-ம் தேதி ஆகும்.


தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் ஆர்வத்துடன் வேட்பு மனுத் தாக்கல் செய்து வருகின்றனர். நேற்று 13.12.2019 தேதிவரை வரை 1 லட்சத்து 9 ஆயிரத்து 778 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் முதல் முறையாக வேட்பாளர்கள் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இது வரை தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் கிராம, ஊராட்சி, வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 75,170 பேரும், கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 26,245 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 7659 பேரும், மாவட்ட வார்டு உறுப்பினர் பதவிக்கு 704 பேர் என மொத்தம் 1 லட்சத்து 9 ஆயிரத்து 778 பேர் மொத்தமாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.


டிசம்பர் 27, 30 ஆகிய இரு நாட்கள் தேர்தல் நாள் ஆகும். அன்று வாக்குப்பதிவு காலை 7 மணியளவில் தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடையும். வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News