Kathir News
Begin typing your search above and press return to search.

கிராமப்புறங்களில் வீடுகளுக்கு நொடிக்கு ஒரு குழாய் இணைப்பு - மத்திய அரசு பெருமிதம் !

கிராமப்புறங்களில் வீடுகளுக்கு நொடிக்கு ஒரு குழாய் குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கிராமப்புறங்களில் வீடுகளுக்கு நொடிக்கு ஒரு குழாய் இணைப்பு - மத்திய அரசு பெருமிதம் !

KarthigaBy : Karthiga

  |  6 April 2023 1:15 AM GMT

மத்திய ஜலசக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையில் உருவான ஜல்ஜீவன் திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீரை குழாய்கள் மூலம் நேரடியாக வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். இது உலகின் மிகப்பெரிய நலத்திட்டங்களில் ஒன்றாகும் .

நாடு முழுவதும் மொத்தம் 19.43 கோடி கிராமப்புற வீடுகள் உள்ளன இந்த திட்டம் தொடங்கும் போது வெறும் 3.23 கோடி வீடுகளில் மட்டுமே குழாய் நீர் இணைப்பு இருந்தது. தற்போது 11.66 கோடி வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த திட்டம் 60 சதவீதம் நிறைவேறி உள்ளது என பெருமிதம் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று மாதங்களாக ' நொடிக்கு ஒரு இணைப்பு' என்கிற வகையில் கிராமப்புறங்களில் வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 86 ஆயிரத்து 894 புதிய இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன . இது குறிப்பிடத்தக்க சாதனை என ஜலசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் குஜராத், தெலுங்கானா, அரியானா, பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களும் அந்தமான், டாமன், டையு மற்றும் புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களும் 100 சதவீதம் குழாய் இணைப்பை கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News