Kathir News
Begin typing your search above and press return to search.

#Opinion : ஹூவாய் போன்ற சீன நிறுவனங்களை இந்தியாவிற்குள் அனுமதிக்கக் கூடாது, ஏன்? ஓர் அலசல்.!

#Opinion : ஹூவாய் போன்ற சீன நிறுவனங்களை இந்தியாவிற்குள் அனுமதிக்கக் கூடாது, ஏன்? ஓர் அலசல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 Jun 2020 2:22 AM GMT

லடாக்கில், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடந்து வரும் மோதல் பதற்றம் இரண்டு அரசியல் யதார்த்தங்களை உறுதிப்படுத்துகிறது. முதலாவதாக, சீன நிறுவனங்கள் இந்தியாவின் தொலைதொடர்பு அமைப்புகளில் நுழைவதை இந்தியா அனுமதிக்கக்கூடாது. எதிர்காலம் டிஜிட்டலாக இருக்கும் வாய்ப்புகளுக்கு மத்தியில், இந்தியாவின் பொதுத் தளத்திற்குள் சீனாவை டிஜிட்டல் ரீதியாக எப்போதும் அனுமதிக்கக்கூடாது. ஹவாய் அல்லது ZTEக்கு 5 ஜி சேவைக்கான உபகரணங்களை வழங்க இந்தியா உரிமம் வழங்கக்கூடாது.

இரண்டாவதாக, கடந்த காலத்தில் சில தொழில்துறை திட்டங்களிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் போலவே, சீனாவை அடிப்படையாகக் கொண்ட எந்த நிறுவனத்தையும் முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இந்தியா அனுமதிக்கக்கூடாது.

ஒரு மெல்லிய கருத்தியல் உடன்பாடு மற்றும் சொந்த வணிக நலன்களைத் தவிர, சீனாவைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் எதுவும் இந்தியாவில் இல்லை. ஜி ஜின்பிங்கிற்கு முழுமையான அதிகாரத்தை வழங்கிய ஒரு சர்வாதிகார ஆட்சி, தற்போது அனைவரிடமும் வம்பிழுத்து கேலிச் சித்திரம் போல் ஆகிக் கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவை "அமெரிக்காவின் நாயாக பணியாற்றும் பெரிய கங்காரு" என்று குறிப்பிட்டுள்ளது சீனா. அதற்கு அடுத்த நாடுகளின் வணிகச் சந்தைகளும், நிலங்களும் மட்டுமே வேண்டும். நல்லுறவு எதுவும் தேவையில்லை என்ற ரீதியில் பேசி வருகிறது.

லடாக்கில் உள்ள இந்திய எல்லைக்குள் அதன் ஊடுருவல்கள் இதன் ஒரு பகுதியாகும். இந்த விஷயங்கள் ராம் மாதவ், எச்.எஸ்.பனாக், ஹர்ஷ் வி.பந்த், காஞ்சன் குப்தா மற்றும் மனோஜ் ஜோஷி போன்ற நிபுணர்களால் விளக்கமளிக்கப்பட்டுள்ளன. இது ஹாங் காங் மற்றும் தைவானில் சீனா மூக்குடைப்பட்டு வருவதால், கவனத்தை திசை திருப்பும் முயற்சியாகவும் இருக்கலாம். இந்தியா மீதான அதன் வெறுப்பு நிலையானது. இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு ஆதரவு கொடுப்பது, ஐநா சபையில் இந்தியாவின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவது ஆகிவற்றின் மூலம் அந்த வெறுப்பை வெளிப்படுத்துகிறது. கடந்த பத்தாண்டுகளாக , இந்தியா வளைந்து கொடுக்க மறுப்பது சீனாவை விரக்தியடையச் செய்து, அதன் கோபத்தை மேலும் தூண்டுகிறது.

இது தான் இந்தியாவுக்கான சீனாவின் அணுகுமுறை. ஒவ்வொரு தேசமும் அதன் சொந்த தேர்வை எடுக்க வேண்டும். இந்தியாவின் தேசிய நலனைப் பொறுத்தவரை, தேர்வு தெளிவாக உள்ளது. சீனாவின் பொருளாதார பாசத்திற்கு இடமளிக்கக் கூடாது. எனது 10 டிசம்பர் 2019 கட்டுரை, "5 ஜி உள்கட்டமைப்பு, ஹவாய் தொழில்நுட்ப-பொருளாதார நன்மைகள் மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கவலைகள்: ஒரு பகுப்பாய்வு", இந்த விஷயங்களை வாதிட்டது. 5 ஜி தொழில்நுட்பத்தின் விமர்சனம் அதன் வேகத்தால் மட்டுமல்ல, அதன் பரவலையும் அடிப்படையாகக் கொண்டது. 5G இன் உண்மையான சக்தி நெட்வொர்க்குகளின் வலையமைப்பாக இருப்பதற்கான திறனில் உள்ளது - ஒரே நேரத்தில் ஆட்சி, வணிகம், ஸ்மார்ட் நகரங்கள், கல்வி, இயக்கம் மற்றும் COVID19 க்குப் பிந்தைய உலகில், டெலிமெடிசின் மூலம் சுகாதாரப் பாதுகாப்பு என பல துறைகளில் அதன் ஆதிக்கம் விரிவடைகிறது.

5 ஜி தொழில்நுட்பத்தைப் பற்றி பேசுவது தேசிய பாதுகாப்புக்கு ஒரு முக்கிய விஷயமாக அமைகிறது. இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 5 ஜி உபகரணங்கள் வழங்குவதற்காக ஹவாய் அல்லது இசட்இயை அனுமதிப்பது சீன பொது கம்யூனிஸ்ட் கட்சியை நம் பொதுத் தேர்தலை நடத்துமாறு கேட்பது போலாகும். எல்லைகளில் சீனாவை நாம் விரட்டும்போது, ​​நம் நகரங்களையும், வீடுகளையும், மனதையும் அந்த சித்தாந்தத்திற்கு ஒப்படைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சீன தொழில் நுட்பம் இந்திய நலன்களுக்கு ஏற்படுத்தும் ஆபத்து உண்மையானது. வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் முதல் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மனிதாபிமான உதவி வரை அனைத்தையும் ஆயுதபாணியாக்கும் ஒரு சர்வாதிகார ஆட்சியின் ஆதரவை அது பெற்றுள்ளது. அரசு கட்டுப்பாட்டில் உள்ள சீன நிறுவனங்களின் செயல்பாடுகள் உலகளாவிய கவலையாகும். ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவும் இதைக் கண்டுபிடித்து விட்டன, ஐரோப்பா கண்டுபிடிக்கும் பணியில் உள்ளது, மேலும் சிறிய நாடுகள் அதன் விளைவுகளை மிகவும் தாமதமாக உணரும்.

சீன நிறுவனங்களின் செயல்களில் சீன அரசு கட்டுப்பாடு என்பது விளையாட்டு விஷயமல்ல. மேலும், இது இந்தியாவுக்கு மட்டும் அல்ல - உலகளாவிய ஆபத்து ஆகும். பொதுவாக உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களும், குறிப்பாக இந்தியாவும், தேசிய நலன்களை மனதில் வைத்துக்கொண்டு சீன தேசிய புலனாய்வு சட்டத்தை (20 ஜூன், 2017 ஜனவரி 20 ஆம் தேதி நடைபெற்ற 20 வது தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் 28 வது கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது) கவனமாக படித்தால் எந்தவொரு சீன நிறுவனத்தையும் அவர்களின் முக்கியமான உள்கட்டமைப்பில் பங்கேற்க அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். சட்டத்தின் நான்கு பிரிவுகள் இங்கே:

பிரிவு 7: அனைத்து அமைப்புகளும் குடிமக்களும் சட்டத்தின் படி தேசிய உளவுத்துறை முயற்சிகளுக்கு ஆதரவளிக்க, உதவ ஒத்துழைப்பார்கள், மேலும் அவர்கள் அறிந்த தேசிய உளவுத்துறை பணி ரகசியங்களை பாதுகாப்பார்கள்.

பிரிவு 9: தேசிய உளவுத்துறை முயற்சிகளுக்கு பெரும் பங்களிப்பு செய்யும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு அரசு பாராட்டுகளையும் விருதுகளையும் வழங்குகிறது.

பிரிவு 12: தொடர்புடைய மாநில விதிகளின்படி, தேசிய உளவுத்துறை பணி நிறுவனங்கள் தொடர்புடைய நபர்கள் மற்றும் அமைப்புகளுடன் கூட்டுறவு உறவுகளை ஏற்படுத்தி, தொடர்புடைய பணிகளைச் செய்ய அவர்களை தக்க வைத்துக் கொள்ளலாம்.

பிரிவு 14: உளவுத்துறை முயற்சிகளை சட்டப்பூர்வமாக மேற்கொள்ளும் தேசிய உளவுத்துறை நிறுவனங்கள் தொடர்புடைய உறுப்புகள், அமைப்புகள் மற்றும் குடிமக்கள் தேவையான ஆதரவு, உதவி மற்றும் ஒத்துழைப்பை வழங்குமாறு கோரலாம்.

1950 களில் தனது சொந்த நலன்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் உறுப்பினராக சீனாவிற்கு ஆதரவு அளித்தது. ஏழு தசாப்தங்களுக்குப் பின்னர், ஹவாய் நிறுவனத்தை இந்தியாவுக்குள் அனுமதித்தால் நாம் அடிபணிந்து விட்டதாக ஆகிவிடும். நரேந்திர மோடி அரசாங்கம் இந்த நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் மற்றும் ஹவாய் இந்தியாவின் உயர் தொழில்நுட்ப அரங்கில் நுழைவதைத் தடுக்க வேண்டும், மேலும் இந்தியாவின் முக்கியமான துறைகள் மற்றும் உள்கட்டமைப்புகளில் சீன பங்களிப்பை விலக்க வேண்டும்.

சீனா அதிசயமாக மனம் மாறலாம் எனக் கூறப்படுகிறது, அதுவரை மேட் இன் சீனா நிறுவனங்களை மேட் இன் சீனா தொற்றுநோயை அணுகுவதை போலவே முன்னெச்சரிக்கையுடன் நடத்தப்பட வேண்டும்.

Author: GAUTAM CHIKERMANE-- ORF

Next Story
கதிர் தொகுப்பு
Trending News