Kathir News
Begin typing your search above and press return to search.

நடுத்தர வர்க்கத்தின் நகர்ப்புற சொந்த வீடு கனவை நினைவாக்கிய மோடி அரசு

நகர்ப்புறங்களில் சொந்த வீடு கட்ட வங்கி கடன் வட்டியில் சலுகை அளிக்கும் புதிய திட்டத்தை சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார்.

நடுத்தர வர்க்கத்தின் நகர்ப்புற சொந்த வீடு கனவை நினைவாக்கிய மோடி அரசு

KarthigaBy : Karthiga

  |  17 Aug 2023 5:45 AM GMT

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்பொழுது அவர் பேசியதாவது:-


மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில வாரங்களில் நடந்த கலவரத்தால் பலர் உயிரிழந்தனர். தாய்மார்கள் மற்றும் மகள்களின் கௌரவம் பாதிக்கப்பட்டுள்ளது. அமைதி திரும்பி உள்ளது. ஒட்டுமொத்த நாடும் மணிப்பூருடன் இருக்கிறது. அங்கு பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. நகர்ப்புறங்களில் சொந்த வீடு இன்றி வாடகை வீடுகளில் வசிக்கும் நடுத்தர வகுப்பினருக்காக விரைவில் புதிய திட்டம் தொடங்கப்படும்.


அவர்கள் நகர்ப்புறங்களில் சொந்த வீடு கட்டுவதற்காக வங்கி கடனுக்கான வட்டியில் நிவாரணம் அளிக்கப்படும். பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது. நாட்டில் மகளிர் சுய உதவி குழுக்களில் 10 கோடி பெண்கள் உள்ளனர். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வேளாண்மை பணிக்கான டிரோன்கள் வழங்கப்படும். திட்டம் விரைவில் தொடங்கப்படும்.


டிரோன்களை எப்படி இயக்குவது? எப்படி பழுது பார்ப்பது என்றும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். முதல் கட்டமாக 15 ஆயிரம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வேளாண்மைக்கான ட்ரோன்கள் வழங்கப்படும். கிராமங்களில் 2 கோடி பெண்களை லட்சாதிபதியாக பார்க்க வேண்டும் என்பது எனது கனவு. அதற்காக அவர்களுக்கு பிளம்பிங் எல்.இ.டி பல்பு உருவாக்குதல் போன்ற திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் லட்சாதிபதி சகோதரி திட்டம் தொடங்கப்படும்.


விவசாயிகளுக்கு இதுவரை 2 லட்சத்து ஐம்பதாயிரம் கோடி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் கோடி உரமானிய அளிக்கப்பட்டுள்ளது. மலிவு விலை ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்ய மக்கள் மருந்தகங்களை மத்திய அரசு அமைந்துள்ளது. அவற்றின் எண்ணிக்கையை 10,000 இருந்து 25 ஆயிரம் ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இளைஞர் சக்தி தான் எனது பலம். இந்திய இளைஞர்களின் வலிமையே உலகம் பார்த்து வருகிறது.


ஸ்டார்ட் அப் எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கையில் உலகில் மூன்றாவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது. புராண காலத்தில் பொருள்களை இந்தியா ஏற்றுமதி செய்த போது பணவீக்கத்தையும் சேர்த்து இறக்குமதி செய்தது. மற்ற நாடுகளை விட பணவீக்கம் குறைவாக இருக்கிறது என்பதற்காக நான் திருப்தி அடைய முடியாது. பணம் வீகத்தை மேலும் குறைக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது. எனது முயற்சிகள் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News