Kathir News
Begin typing your search above and press return to search.

இளைஞர்களை வழிநடத்த பா. ஜனதாவால்தான் முடியும்- சரத்குமார்!

இளைஞர்களை வழிநடத்த பா. ஜனதாவால்தான் முடியும் என்று கரூரில் நடிகர் சரத்குமார் பேசினார்.

இளைஞர்களை வழிநடத்த பா. ஜனதாவால்தான் முடியும்-  சரத்குமார்!

KarthigaBy : Karthiga

  |  15 April 2024 5:42 AM GMT

கரூர் நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து நடிகர் சரத்குமார் நேற்று உப்பிடமங்கலம் கடைவீதி வெங்கமேடு பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து பேசினார் அப்போது அவர் பேசியதாவது:-

பதினோராவது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரத்தை ஐந்தாவது இடத்திற்கு கொண்டு வந்தது மோடி ஆட்சி என்பதை மறந்து விடக்கூடாது. தமிழகத்திலிருந்து ஒரு எம்.பி.யும் இல்லாத போது பல்வேறு திட்டங்கள் மோடி அரசால் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை எல்லாம் மறைத்து நாங்கள்தான் செய்வது போல் நாடகமாடிக் கொண்டிருக்கிறது இரு திராவிட கட்சிகள் .இந்த தேர்தலை தேசப்பற்றுக்கான தேர்தல் என எடுத்துக்கொள்ள வேண்டும் .நாம் அனைவரும் ஒன்றாக இருந்தால் பொருளாதார ரீதியில் உயர்வோம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த தேர்தல் நடைபெற்று கொண்டுள்ளது.

2028 ஆம் ஆண்டு அதிகமான இளைஞர்கள் உள்ள நாடாக இந்தியா இருக்கும் என்று கருத்து கணிப்பு சொல்கிறது. இந்த இளைஞர்களை வழி நடத்துவதற்கு நாம் அனைவரும் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். சிறந்த கல்வி,கல்விக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் என்ற அடிப்படையில் இளைஞர்களை வழிநடத்தி பொருளாதார அடிப்படையில் உயர்த்த வேண்டும் என்றால் மோடி ஆட்சியால்தான் முடியும். கச்சத்தீவை மீட்க முடியும் என்று சொன்னால் அது மோடியால் மட்டுமே முடியும் .அதற்கு பாஜக ஆட்சி மலர வேண்டும் .

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக முதலமைச்சராக இருந்தபோது பேட்டி கண்ட பெருமை எனக்கு உண்டு. பிரிவினையை விதைப்பது இரு திராவிட இயக்கங்கள். உண்மையான சமத்துவம் நியாயத்துக்கு கட்டுப்பட்டு மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் .நம் தேச உயர வேண்டும் என்று சொன்னால் அதற்கு மோடியின் ஆட்சி வரவேண்டும். அவ்வாறு வருவதற்கு வி.வி செந்தில்நாதனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News