Kathir News
Begin typing your search above and press return to search.

கர்ப்பிணி பெண்ணை எட்டி உதைத்த பாதுகாவலர் கைது!

பாகிஸ்தானில் கர்ப்பிணி பெண்ணை எட்டி உதைத்த காவலர்கள் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்ப்பிணி பெண்ணை எட்டி உதைத்த பாதுகாவலர் கைது!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  18 Aug 2022 1:56 AM GMT

பாகிஸ்தானில் கர்ப்பிணி பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாவலர் ஒருவர் எட்டி உதைக்கும் காட்சிகள் அடங்கிய ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இந்த வைரலான வீடியோ பதிவுகளை வைத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். கராச்சி நகரிலுள்ள குளிஸ்தா்-இ-ஜெளஹர் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளில் பணிப்பெண்ணாக வேலை பார்க்கும் பெண் ஒருவர் தனது மகனிடம் சாப்பாடு கொண்டு வருமாறு தெரிவித்துள்ளார்.


அவரது மகன் தனது தாய்க்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு அந்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்த முற்பட்டபோது கேட் அருகே தடுத்து நிறுத்தியுள்ளார் பாதுகாவலர். இதையடுத்து அங்கு வந்த அந்த பெண் பாதுகாவலரிடம் தனது மகனை தடுத்து நிறுத்தியது தொடர்பாக முறையிட்டுள்ளார். இதனால் கோபமடைந்த பாதுகாவலர் அந்த பெண் கர்ப்பிணி என்று கூட பாராமல் கன்னத்தில் பளார் என அறைந்து கீழே தள்ளியுள்ளார்.


பின்னர் அந்தப் பெண் தடுமாறியவாறு எழுந்தரிக்க முயற்சித்தபோது எட்டி உதைத்துள்ளார். பாதுகாவலரின் இந்த மோசமான செயல்கள் அங்கு உள்ள CCTV காட்சிகளில் பதிவாகியுள்ளது இதன் பிறகு இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அப்லோட் செய்யப்பட்ட பிறகு நெட்டிசன்கள் பல்வேறு வகைகளில் அந்த நபரை விமர்சித்திருக்கிறார்கள். அதன் பெயரில் தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

Input & Image courtesy: Hindustan times News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News