Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவிற்கு அணுகுண்டு தாக்குதல் - பாகிஸ்தான் பெண் அமைச்சர் மிரட்டல் பேச்சு!

இந்தியாவிற்கு அணுகுண்டு தாக்குதல் மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் பெண் அமைச்சர்.

இந்தியாவிற்கு அணுகுண்டு தாக்குதல் - பாகிஸ்தான் பெண் அமைச்சர் மிரட்டல் பேச்சு!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  19 Dec 2022 1:56 AM GMT

இந்திய பிரதமர் மோடி குறித்து பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ அவதூறாக தற்போது கருத்துக்களை பேசி இருக்கிறார். இதற்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இதற்கிடையே பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு பகுதிகளில் பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தினார்கள். பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ கொடும்பாவிகளை எதிர்த்தனர். இதில் இந்தியாவிற்கு பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதல் மிரட்டல் விடுத்து இருக்கிறது. பாகிஸ்தான் ஆளும் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த பெண் தலைவரும், அமைச்சருமானின் ஜாஜியா மாரி நிபுணருக்கு பேட்டி அளித்தார்.


அப்பொழுது அவர் அமைச்சர் பிலாவல் பூட்டோவிற்கு ஆதரவாக பேசினார். மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில், பாகிஸ்தானிடம் அணுகுண்டு உள்ளது என்பதை இந்தியா மறந்துவிடக்கூடாது. எங்களது அனுசக்தி நிலை அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல, தேவைப்பட்டால் நாங்கள் பின்வாங்க மாட்டோம். எப்படி பதில் அளிக்க வேண்டும்? என்று பாகிஸ்தானுக்கு தெரியும். எங்களை அறிந்தால் நாடு பின்வாங்காது, பாகிஸ்தானுக்கும் சமமான தீவிரவாதத்துடன் பதிலடி கொடுக்க தெரியும்.


மோடி அரசாங்கம் சந்திக்க அவருக்கு தக்க பதிலடி கிடைக்கும், பாகிஸ்தான் மீது மீண்டும் மீண்டும் குற்றசாட்டுகளை கூறினால் பாகிஸ்தான் அமைதியாக கேட்டுக் கொண்டு இருக்காது என்று அவர் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார். இவருடைய இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவருடைய ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், பாகிஸ்தான் பொறுப்புள்ள அணுசக்தி நாடு. தீவிரவாதத்திற்கு எதிரான பொருள் இந்தியாவை விட பாகிஸ்தான் அதிகம் தியாகம் செய்துள்ளது என்று கூறினார்.

Input & Image courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News