Kathir News
Begin typing your search above and press return to search.

மதபள்ளிக்கு வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதகுரு: ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணம் டோபா டெக் சிங் மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர், குரி அடிஃயுர் ரஹ்மான் என்ற முஸ்லிம் மதகுரு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மதபள்ளிக்கு வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதகுரு: ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!

ThangaveluBy : Thangavelu

  |  3 Oct 2021 2:06 AM GMT

பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணம் டோபா டெக் சிங் மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை ஒரு குரி அடிஃயுர் ரஹ்மான் என்ற முஸ்லிம் மதகுரு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

12 வயது சிறுமி மதப்பள்ளியில் பாடம் கற்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த பள்ளியில் இருந்த மதகுரு ரஹ்மான் தனது உதவியாளர் பில்கியுஷ் பிபி உடன் இணைந்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியை ரஹ்மான் பாலைவனத்திலேயே தவிக்க விட்டு ஓடிவந்துள்ளார்.

பாலைவனத்தில் சிறுமி அழுது கொண்டிருப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்களிடம் தான் மதகுருவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன் என்று கூறியுள்ளார். இது பற்றி போலீசாருக்கு தகவல் அளித்த பின்னர் மதகுரு ரஹ்மான் மற்றும் அவருக்கு உதவிய பில்கியுஷ் பிபி ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது மதகுரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக இவ்வழக்கு நடைபெற்று வந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த மதகுருவுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.2 லட்சம் அபராதமும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மேலும் மதகுருவுக்கு உதவிய பில்கியுஷ் பிபி-க்கு 3 ஆண்டுகள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

Source: Daily Thanthi

Image Courtesy:The Tatva


Next Story
கதிர் தொகுப்பு
Trending News