டிஜிட்டல் அமைப்புகளுக்கு 'பான்' எண்ணை பொது அடையாள அட்டையாக பயன்படுத்தலாம் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
குறிப்பிட்ட அரசு நிறுவனங்களின் அனைத்து விதமான டிஜிட்டல் அமைப்புகளுக்கு பான் எண்ணெ பொது அடையாள அட்டையாக பயன்படுத்தலாம் என மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
By : Karthiga
வருமான வரி செலுத்துவதற்கு நிரந்தர கணக்கு எண் அடங்கிய அட்டையை வருமானவரித்துறை வழங்கி வருகிறது. 10 இலக்கங்களை கொண்ட இந்த எண் அரசின் பல்வேறு சேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
ந்த நிலையில் இந்தப் பான் எண்ணெ டிஜிட்டல் அமைப்புகளுக்கு அடையாள அட்டையாக பயன்படுத்தலாம் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்த அவர் இது குறித்து கூறுகையில் குறிப்பிட்ட அரசு துறைகளில் அனைத்து விதமான டிஜிட்டல் அமைப்புகளுக்கும் பொது அடையாள அட்டையாக பான் எண்ணெ பயன்படுத்தலாம்.
இது நாட்டில் எளிதாக வணிகம் செய்வதை மேலும் மேம்படுத்த உதவும் என தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒப்பந்தத்தை நிறைவேற்ற தவறினால் 'விவாட்சே விசுவாஸ்' திட்டத்தின் ஒரு பகுதியாக 95 சதவீத செயல் திறன் பாதுகாப்பு சிறு வணிகங்களுக்கு திருப்பி தரப்படும் என்று கூறினார். மூன்றாம் கட்ட இ-கோர்ட்டுகள் தொடங்கப்படும் எனக் கூறிய நிர்மலா சீதாராமன் நிதி ஆயோக்கின் மாநில ஆதரவு பணி மூன்று ஆண்டுகளுக்கு தொடரும் என்று கூறினார்.