Kathir News
Begin typing your search above and press return to search.

"மூன்று மாநிலங்களில் பா. ஜனதா வெற்றிக்கு என் தலைமை மட்டும் காரணம் அல்ல கூட்டு முயற்சியே காரணம்"- அனைவரது உழைப்பையும் மதிக்கும் மோடி!

மூன்று மாநிலங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றதற்கு எந்த தனி நபரும் காரணமல்ல. கூட்டு முயற்சி தான் காரணம் என்று பா.ஜ.க எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

மூன்று மாநிலங்களில் பா. ஜனதா வெற்றிக்கு என் தலைமை மட்டும் காரணம் அல்ல கூட்டு முயற்சியே காரணம்- அனைவரது உழைப்பையும் மதிக்கும் மோடி!

KarthigaBy : Karthiga

  |  9 Dec 2023 9:45 AM GMT

சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் ராஜஸ்தான் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றுள்ளது. இதற்கு பிரதமர் மோடியின் தலைமை தான் காரணம் என்று பேசப்படுகிறது. இந்த நிலையில் பா.ஜ.க எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. 5 மாநில தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக நடந்த பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் இதுவே ஆகும். கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். மூன்று மாநில தேர்தல் வெற்றிக்காக அவருக்கு பா.ஜனதா தலைவர் ஜே.பி நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். எம்பிக்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டினார். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது :-


மூன்று மாநிலங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளதற்கு எந்த தனிப்பட்ட தலைவரும் காரணமல்ல. கூட்டு மனப்பான்மையே வெற்றிக்கு காரணம். எனவே இது தனி நபரின் வெற்றி அல்ல. கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றிகள். அனைவரும் கூட்டு மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் பா.ஜனதாவின் பலம் அதிகரித்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது 40 தடவை சட்டசபை தேர்தல்களை சந்தித்துள்ளது. ஆனால் ஏழு தடவை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதன் வெற்றி விகிதம் 18 சதவீதம் ஆகும். ஆனால் பா.ஜ.க 39 தடவை சட்டசபை தேர்தல்களை சந்தித்து 22 தடவை வெற்றி பெற்றுள்ளது. அதை 56 சதவீதம் மாநில கட்சிகள் கூட 50% வெற்றி வேதத்துடன் காங்கிரஸ் விட சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஆட்சி நடத்துவதற்கு மக்களால் பெரிதும் விரும்பப்படும் கட்சி பா.ஜனதா என்பது இது காட்டுகிறது.


ஒரு மாநிலத்தில் இரண்டு தடவை ஆட்சியில் இருந்துவிட்டு தேர்தலை சந்திக்கும் போது காங்கிரஸின் வெற்றி விகிதம் 14 சதவீதம் ஆகும். பா.ஜனதா வெற்றி விகிதம் 59 சதவீதமாகவும் உள்ளது .மத்திய அரசு நலத்திட்டங்களை மக்களிடம் விளக்கும் "சங்கல்ப் யாத்திரியில்" அனைத்து எம்.பிகளும் பங்கேற்க வேண்டும். என்னை பொறுத்தவரை பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகள் என்ற நான்கு ஜாதிகள் மட்டுமே உள்ளன. அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு நாம் பாடுபட வேண்டும். பொதுமக்களுடன் உரையாடும்போது அவர்களுக்கு பிடித்த வார்த்தைகளையே கட்சி தலைவர்கள் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக 'மோடிஜி உத்தரவாதம்' என்று சொல்வதற்கு பதிலாக மோடி உத்தரவாதம் என்று கூற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News