ஊட்டி அருகே பயங்கரம் - பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை
ஊட்டி அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
By : Karthiga
நீலகிரி மாவட்டம் கூடலூர் காவல் எல்லைக்குட்பட்ட பைக்காரா அருகே சூட்டிங் மட்டம் உள்ளது. இப்பகுதி சுற்றுவட்டாரத்தில் தோடர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பகல் கோடுமந்து இந்த பகுதியைச் சேர்ந்த 15வயது மாணவி ஊட்டி ஹிந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார் . தற்போது தேர்வு நடைபெற்று வருவதால் நேற்று வழக்கம்போல் மாணவி பள்ளிக்கூடத்துக்கு சென்றார் .ஆனால் மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை .
இது தொடர்பாக பெற்றோர் பல இடங்களில் தேடினர் . அங்கர் கோட் என்ற இடத்தில் ஒரு புதருக்குள் மாணவி இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அப்பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது தனது மகன் இறந்து கிடப்பதை கண்டு பெற்றோர் கதறி அழுதனர் .
மேலும் மாணவியின் உடல் முழுவதும் அலங்கோலமாக இருப்பதை கண்டனர். இது குறித்து பைக்காரா போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர் . அப்போது இந்து கிடந்த மாணவியின் உடல் அருகே போன்று நின்று இருந்தது தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதனுடைய குற்றவாளிகளை கைது செய்ய கோரி கிராம மக்கள் வானவில் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் நிலவியது.
அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தது தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் .இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.