Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக அரசின் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த குடியரசு தலைவர் - என்ன மசோதா தெரியுமா?

பத்திரப்பதிவு சட்டத் திருத்தம் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழக அரசின் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த குடியரசு தலைவர் - என்ன மசோதா தெரியுமா?

Mohan RajBy : Mohan Raj

  |  13 Aug 2022 1:35 PM GMT

பத்திரப்பதிவு சட்டத் திருத்தம் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழகத்தில் சர்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்படும் ஆவணங்களில் ஒரு சில நேரங்களில் போலியான ஆவணங்களை காட்டி பத்திர பதிவு செய்யப்படுகிறது.

இதில் சர் பதிவாளர்கள் கூட்டு சேர்ந்து மோசடியில் ஈடுபடுவதாகவும் புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன. இவ்வாறு பதிவு செய்யப்படும் புகார்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் நீதிமன்றம் செல்கின்றனர். இந்த மாதிரியான வழக்குகள் ஏராளமாக நிலுவையில் உள்ளன.

இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில் தமிழக அரசு சட்டப்பேரவையில் பத்திரப்பதிவு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது, அந்த மசோதாவில் போலியான ஆவண பதிவு செய்யும் பட்சத்தில் மாவட்ட பதிவாளர் உரிய விசாரணை நடத்தி தீர்வு காண முடியும். இந்த மசோதா சட்டப் பறவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து மத்திய அரசின் பல்வேறு துறைகளில் ஒப்புதல் பெறப்பட்டன.

இதனை தொடர்ந்து அந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய பதிவு துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்த மசோதா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News