60 ஆண்டுகளில் முடியாததை எட்டு ஆண்டுகளில் சாதித்த பிரதமர் மோடி- அனுராக் தாகூர்
சந்திரயான்- 3 விண்கலம் மற்றும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை சுட்டிக்காட்டி உள்ள மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளில் முடியாததை பிரதமர் மோடி எட்டு ஆண்டுகளில் சாதித்து விட்டதாக பாராட்டியுள்ளார்.
By : Karthiga
நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் திட்டம் வெற்றியடைந்திருக்கிறது. இந்த வரலாற்று சாதனை உலக நாடுகளின் பாராட்டுகளை பெற்று வருகிறது . இந்த திட்டமம் வெற்றி மற்றும் பல்வேறு மத்திய அரசின் திட்டங்களுக்காக பிரதமர் மோடியை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மந்திரி அனுராதாக்கூர் பாராட்டியுள்ளார். மத்திய பிரதேசத்தில் நடந்த பிரதமர் மோடியின் உரைகள் அடங்கிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அனுராக்தாக்கூர் அதில் உரையாற்றும்போது இது தொடர்பாக கூறியதாவது:-
நிலவின் தென் துருவத்தில் நாம்தான் முதன் முதலில் விண்கலத்தை தரையிறக்கி சாதித்திருக்கிறோம். நமக்கு இது ஒரு பெருமையான தருணம். இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளில் செய்ய முடியாததை பிரதமர் மோடி வெறும் 8 ஆண்டுகளில் சாதித்து விட்டார். நாடு முழுவதும் 4 கோடி ஏழைகள் வீடுகள் பெற்று இருக்கிறார்கள் .12 கோடி பெண்களும் அவர்களது குடும்பமும் கழிவறை வசதி பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சாரம் சென்றடைந்து உள்ளது .
கொரோனா பெருந்தொற்று காலத்தில் 2 அரை ஆண்டுகளுக்கு நாடு முழுவதும் என்பது கோடி பேர் இரட்டை ரேஷன் பெற்றுள்ளனர். தற்போது 12 கோடி பேருக்கு வெறும் 3 ஆண்டுகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 60 கோடி மக்களுக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான இலவச சிகிச்சை அளிக்கும் பணியை கடந்த 9 ஆண்டுகளில் மோடிஜி செய்துள்ளார். இவ்வாறு அனுராக் தாக்கூர் கூறினார்.
SOURCE :DAILY THANTHI