Kathir News
Begin typing your search above and press return to search.

அருணாச்சல பிரதேசத்தில் புதிய விமான நிலையத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

அருணாச்சலப் பிரதேசத்தில் புதிய விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

அருணாச்சல பிரதேசத்தில் புதிய விமான நிலையத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

KarthigaBy : Karthiga

  |  27 Oct 2022 11:45 AM GMT

அருணாச்சல பிரதேச மாநிலத்தின் தலைநகர் இட்டா நகரில் இந்திய விமான நிலைய ஆணையத்தால் ரூ.645 கோடி செலவில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. நான்காயிரத்து நூறு சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய விமான நிலையம் அனைத்து நவீன வசதிகளையும் கொண்டுள்ளது. டோன்யி போலோ என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய விமான நிலையத்தை வருகிற 30-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


மாநில முதல் மந்திரி பெமா காண்டு சமீபத்தில் டெல்லியில் பிரதமரை நேரில் சந்தித்து டோன்யி போலோ விமான நிலையத்தை திறந்து வைக்கும்படி கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News