Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடி 9-ஆம் தேதி சென்னை வருகை - வாகன அணிவகுப்பு மேற்கொள்ள திட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகிற ஒன்பதாம் தேதி வருகை தந்து பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து வாகன அறிவிப்பு மூலம் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி 9-ஆம் தேதி சென்னை வருகை - வாகன அணிவகுப்பு மேற்கொள்ள திட்டம்!

KarthigaBy : Karthiga

  |  1 April 2024 11:26 AM GMT

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தமிழக பாஜகவும் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் தீவிர களப்பணி ஆற்றி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார் இதற்காக வருகிற ஒன்பதாம் தேதி சென்னைக்கு பிரதமர் மோடி வருகை தர திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் பிரமாண்ட வாகன அணிவகுப்பு நடத்த பா.ஜனதா திட்டமிட்டு இருப்பதாகவும் தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜன் ,மத்திய சென்னை வேட்பாளர் வினோத் பி.செல்வம், வடசென்னை வேட்பாளர் பால் கனகராஜ், ஆகியோருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது .

இதற்கான பாதுகாப்பு ஆய்வுகள் குறித்து பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பயணத்திட்டம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி நீலகிரி, பெரம்பலூர், வேலூர் ஆகிய தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News