பிரதமர் மோடி வால்மார்ட் தலைவர் சந்திப்பு: இந்திய முன்னேற்றத்தில் பிரதமருக்கு இப்படி ஒரு நோக்கமா?
டெல்லியில் பிரதமர் மோடியுடன் வால்மார்ட் தலைவர் மேக்மில்லன் சந்தித்து உரையாடினார்.
By : Karthiga
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பன்னாட்டு சில்லறை வணிக நிறுவனமான வால்மார்ட் தலைமை செயல் அதிகாரி டக் மேக் மில்லன் இந்தியா வந்துள்ளார் இந்த பயணத்தின் ஒரு பகுதியாக டக் மேக் மில்லன் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு அம்சங்கள் தொடர்பாக இருவரும் விவாதித்தனர். இந்த சந்திப்பு தொடர்பாக பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் .இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் வால்மார்ட் தலைமை செயலதிகாரி டக் மேக் மில்லன் உடனான சந்திப்பு இனிமையானதாக இருந்தது. இதில் பல்வேறு விஷயங்களில் நுண்ணறிவு கலந்த விவாதங்களை நடத்தினோம். முதலீட்டுக்கான கவர்ச்சிகரமான இடமாக இந்தியா உருவானதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
பிரதமருடன் ஆன இந்த சந்திப்புக்கு டக் மேக் மில்லனும் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் "சிறப்பான உரையாடலுக்கு பிரதமர் மோடிக்கு நன்றி . 2027 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு 10 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்வதை நோக்கி நாங்கள் பணியாற்றி வருகிறோம். மேலும் பொம்மைகள், மீன்கள் மற்றும் பிற பொருள்களில் இந்தியாவை உலகளாவிய ஏற்றுமதி தலைமையாக மாற்றுவதற்கு தளவாடங்கள், திறன் மேம்பாடு மற்றும் விநியோகச் சங்கிலிகளை வளப்படுத்த உறுதி பூண்டுள்ளோம் " எனக் கூறியுள்ளார்.