Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருப்பதாக செய்தி.!

பிரதமர் நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருப்பதாக செய்தி.!

பிரதமர் நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருப்பதாக செய்தி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 April 2020 12:29 PM GMT

அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஏற்கெனவே விவாதித்த நிலையில் பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்களும் ஊரடங்கை நீட்டிக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் பிரதமர் மோடி நாளை காலை 10 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. என்றாலும் பிரதமர் அலுவலகத்தால் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. என்றாலும் டெல்லியிலிருந்து வரும் மேலிடத்தகவல்கள் கூறுவதாக ஏனைய பத்திரிகைகளில் இந்த செய்தி இன்று மாலையில் இருந்து வெளியிடப்படுகின்றன.

பெரும்பாலான மாநில முதல்வர்களின் பரிந்துரையை ஏற்று ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகவும், இதுபற்றிய அறிவிப்பை அவர் வெளியடலாம் எனவும் தெரிகிறது.

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் அதே சமயம் பொருளாதார நடவடிக்கைகள பாதிக்கப்படாமல் தொழில் நிறுவனங்கள் சில நடைபெறவும், மக்கள் வருவாய் இழப்பு ஏற்படாமல் தடுக்கவும் சில விதிவிலக்கு மற்றும் அறிவிப்புகளும் வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஊரடங்கு தொடர்வதில் தமிழகத்தை பொறுத்தவரை எந்த வித மாற்றமும் இல்லை, தொடர்ந்து இப்போது உள்ளது போலவே வரும் 30 ந்தேதி வரை ஊரடங்கு தொடரும் என முதல்வர் எடப்பாடி கூறியுள்ளதாக தொலைகாட்சி செய்திகள் கூறுகின்றன.

மேலும் தமிழக மக்கள் வரும் மே மாதத்துக்கான பொருள்களை விலை இல்லாமல் குடும்ப அட்டைகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்றும், வடநாட்டு தொழிலாளர்களும் அரிசி முதல் அனைத்து ரேஷன் பொருள்களையும் விலை இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News