Kathir News
Begin typing your search above and press return to search.

சர்ச்சுக்கு வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த - பங்குத் தந்தைக்கு போக்ஸோ

3 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தேவாலய பங்குத் தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

சர்ச்சுக்கு வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த - பங்குத் தந்தைக்கு போக்ஸோ

Bharathi LathaBy : Bharathi Latha

  |  11 Aug 2022 1:14 AM GMT

ராமேஸ்வரம் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3 மாணவிகள் அங்குள்ள சர்ச்சுக்கு வருகை தந்துள்ளார்கள். சர்ச்சுக்கு வந்த 3 மாணவிகளிடம் நோட்டமிட்டு பாலியல் தொல்லை கொடுத்த பங்குத் தந்தை கைது. மேலும் நோட்டமிட்டு அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தேவாலய பங்குத் தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் உள்ள தேவாலயத்திற்கு அப்பகுதியில் உள்ள ஏராளமானோர் பிரார்த்தனை செய்ய வருவார்கள்.


அந்த பகுதிக்கு ஏராளமானோர் அந்த தேவாலயத்திற்கு வருகை தந்து பிரார்த்தனை செய்து வருவதே வழக்கமாகத் கொண்டுள்ளார்கள். அப்படியே அந்த பகுதியை சேர்ந்த மூன்று பள்ளிமாணவர்கள் அதனால் தினமும் பிரார்த்தனை செய்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு இவர்கள் தனியார் வருவதை அங்கு பாதிரியாராக இருக்கும் ஜான் ராபர்ட் என்பவர் பார்த்துள்ளார். பின்னர் அவர்களிடம் தினந்தோறும் நன்றாக பேசி பழகியுள்ளார். மேலும் நன்கு படிக்க விசேஷ பிரார்த்தனைகளை நடத்துவதாகவும் அந்த மாணவிகளிடம் அவர் தெரிவித்துள்ளார்.


அந்த மாணவிகளுடன் நட்பாக பழகி வந்தார்கள். ஒரு கட்டத்தில் அந்த 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். அவர்கள் மாணவிகளை மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் கொடுக்க வைத்தனர். அந்த புகாரின்பேரில் ஜான் ராபர்ட்டை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Input & Image courtesy: Oneindia News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News