Kathir News
Begin typing your search above and press return to search.

உண்மையான டெல்டாகாரர் பிரதமர் மோடியே-அண்ணாமலை!

விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய பிரதமர் மோடியே உண்மையான டெல்டாகாரர் என்று அண்ணாமலை பேசினார்.

உண்மையான டெல்டாகாரர் பிரதமர் மோடியே-அண்ணாமலை!

KarthigaBy : Karthiga

  |  28 Nov 2023 2:46 PM GMT

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் என் மண் என் மக்கள் நடை பயணத்தை தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மேற்கொண்டார். மன்னார்குடி ருக்குமணி பாளையம் பகுதியில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது . அதனை தொடர்ந்து மகா மாரியம்மன் கோவில் தெரு காந்தி ரோடு பந்தலடி மேலராஜவீதி வழியாக தேரடி வரை அண்ணாமலை நடந்து சென்றார். வழி நெடுகிலும் மக்கள் அவருக்கு கொடுத்த வரவேற்பை அவர் ஏற்றுக்கொண்டார். பின்னால் தனது பிரச்சார வாகனத்தில் நின்று அவர் பேசியதாவது:-


மகாகவி பாரதியார் மன்னார்குடியில் தலை மறைவு வாழ்க்கை நடத்தி பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு என்றார். கடந்த தீபாவளியின் போது இரண்டு நாட்களில் மட்டும் ரூபாய் 467 கோடி மது விற்பனை நடந்துள்ளது. சாராய ஆலைகளை நடத்தி வருகின்ற திமுகவினருக்காகவே இந்த ஆட்சி நடந்து வருகின்றது. மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா தனது சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் 3000 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என தெரிவித்தார். இதுவரை அமைக்கப்படவில்லை.


மன்னார்குடி தொகுதியை உள்ளடக்கிய தஞ்சை எம்.பி.யாக உள்ள எஸ்.எஸ் பழனி மாணிக்கம் கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவரை ஒரு கேள்வியை கூட நாடாளுமன்றத்தில் கேட்கவில்லை. என்பது அதிர்ச்சியாக உள்ளது. பா.ஜ.கவை பொருத்தவரை கடந்த மார்ச் 29-ஆம் தேதி அன்று 8 மண்டலங்களின் நிலக்கரி திட்டம் அறிவிக்கப்பட்டது. அதில் டெல்டாவும் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த பகுதி பா.ஜ.க நிர்வாகிகள் வேண்டுகோளின்படி நான் நேரடியாக நிலக்கரித்துறை அமைச்சரை சந்தித்து அந்த திட்டத்தை டெல்டாவில் நிறைவேற்றுவதில் இருந்து விலக்கு பெற்று அரசாணையை வெளியிட வைத்தோம். தஞ்சையில் விமான போக்குவரத்து தொடங்க பா.ஜ.க சார்பில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் சந்தித்து வலியுறுத்தி அறிவிப்பும் செய்ய வைத்துள்ளோம்.


ஆனால் இதையெல்லாம் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் எம்.பி தான் செய்ததாக கூறுகிறார்.தேர்தல் வாக்குறுதிகள் 99 சதவீதத்தை நிறைவேற்றி விட்டோம் என தினமும் பல பொய்களை முதலமைச்சர் கூறி வருகிறார்.ஊரெங்கும் டாஸ்மாக் கடைகளை திறந்து தமிழகத்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையான மாநிலமாக மாற்றியதுதான் திராவிட மாடலௌ அரசின் சாதனை. காவிரி மேலாண்மை ஆணையம் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய பிரதமர் நரேந்திர மோடியே உண்மையான டெல்டா காரர் இவ்வாறு அவர் கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News