Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லியில் 'பாரத் டெக்ஸ் 2024 ' ஜவுளித்துறை கண்காட்சியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்த இந்திய ஜவுளி சந்தையின் மதிப்பு!

வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் வகையில் ஜவுளித்துறை வளர்ச்சிக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

டெல்லியில் பாரத் டெக்ஸ் 2024  ஜவுளித்துறை கண்காட்சியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்த இந்திய ஜவுளி சந்தையின் மதிப்பு!

KarthigaBy : Karthiga

  |  27 Feb 2024 9:53 AM GMT

தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபம் மற்றும் யசோ பூமி கண்காட்சி மையங்களில் 'பாரத் டெக்ஸ்டைல் 2024' என்ற பெயரில் ஜவுளி கண்காட்சி மற்றும் ஜவுளி சார்ந்த நிகழ்வுகள் நடைபெறுகிறது. இந்தியாவில் இதுவரை நடத்தப்பட்ட சர்வதேச அளவிலான மிகப்பெரிய ஜவுளி சார்ந்த நிகழ்வுகளில் ஒன்றான இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அத்துடன் பாரத் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ஜவுளி கண்காட்சியையும் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசும் போது அவர் கூறியதாவது:-


அடுத்த 20 இந்த ஆண்டுகளில் வளர்ந்த இந்தியாவை உருவாக்க நாங்கள் உறுதி கொண்டு உள்ளோம். ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் வளர்ந்த இந்தியாவின் நான்கு தூண்கள். குறிப்பாக பாரதத்தின் ஜவுளித்துறை இந்த நான்கு தூண்கள் உடன் இணைக்கப்பட்டுள்ளது .எனவே பாரத் டெக்ஸ் போன்ற நிகழ்வு நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானது. ஒரு வளர்ந்த இந்தியாவை கட்டி எழுப்புவதில் ஜவுளி துறையின் பங்களிப்பை விரிவுபடுத்த பரந்த அளவில் அரசு பணியாற்றி வருகிறது. இதில் உங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருக்க எங்கள் அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது.


ஜவுளித்துறை வளர்ச்சிக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் .2014 ஆம் ஆண்டில் இந்திய ஜவுளி சந்தை மதிப்பு ரூபாய் 7 லட்சம் கோடிக்கும் குறைவாக இருந்தது .ஆனால் தற்போது ரூபாய் 12 லட்சம் கோடியை கடந்து விட்டது கடந்த 10 ஆண்டுகளில் நூல் துணி மற்றும் ஆடை உற்பத்தி 25 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜவுளி துறையில் தரக்கட்டுப்பாட்டில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது. ஜவுளி துறையில் பெண்களின் வேலை வாய்ப்பு மற்றும் கிராமப்புற பெண்களின் பங்கேற்பை பொறுத்தவரை ஆடை உற்பத்தியாளர்களில் பத்தில் 7 பேர் பெண்கள் ஆவர்.கைத்தறயில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கிறது.


கடந்த 10 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் கதர் துறை வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளின் வலுவான ஊடகமாக மாறி உள்ளது. இதேபோல இந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவை ஜவுளி துறைக்கும் பயனளித்துள்ளன. தேசிய பேஷன் டெக்னாலஜி வளாகங்களின் எண்ணிக்கை 19 அதிகரித்துள்ளதன் மூலம் திறன் வளர்ப்பில் அரசு கவனம் செலுத்துகிறது. உள்ளூர் நெசவாளர்கள் மற்றும் கைவினைகர்களும் புதிய தொழில்நுட்பங்களை பற்றிய சிறப்பு பயிற்சி திட்டங்கள் மூலம் நிப்டுகளுடன் இணைக்கப்பட்டுள்ளனர் .அரசின் குறுக்கீடு குறைவாக இருக்கும் சமுதாயத்தை உருவாக்குவதே எனது நோக்கம். குறிப்பாக நடுத்தர மக்களின் வாழ்க்கையில் தலையிடுவதை நான் விரும்பவில்லை .நாட்டில் வளர்ச்சியை உறுதிப்படுத்த அரசாங்கம் ஒரு ஊக்கியாக செயல்பட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக குறைந்தபட்ச அரசு தலையீடு உள்ள சமுதாயத்தை உருவாக்க போராடி வருகிறேன். இதை அடுத்த ஐந்து ஆண்டுகளிலும் நிச்சயம் தொடர்வேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News