'பிரதமர் மோடி கடவுளின் அவதாரம்' - உத்திரபிரதேச பெண் மந்திரி சொல்கிறார்
பிரதமர் மோடி கடவுளின் அவதாரம் என உத்தர பிரதேச பெண் மந்திரி ஒருவர் கூறியுள்ளார்.
By : Karthiga
இந்தி வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இதேபோல இந்தியாவிலும் சிறுபான்மையினத்தை சேர்ந்த ஒருவர் பிரதமராக வேண்டும் என எதிர்கட்சிகள் கூறியுள்ளன.எதிர் கட்சிகளின் இந்த கருத்து குறித்து உத்தர பிரதேச மேல்நிலை கல்வித்துறை இணை மந்திரி குலாப் தேவியிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், 'பிரதமர் மோடி ஒரு அவதாரத்தை போன்றவர் 'அசாத்திய திறமைகளை கொண்ட ஒரு மனிதர். அவருடன் யாரும் போட்டியிட முடியாது .அவர் விரும்பினால் அவர் உயிருடன் இருக்கும் வரை பிரதமராக இருக்கலாம். யூகத்தால் எதுவும் நடக்காது. அவ்வளவு அசாதாரணமான ஆளுமை அவர். கடவுள் அவரை தனது பிரதிநிதியாக அனுப்பி உள்ளார். என புகழாரம் சூட்டினார். பிரதமர் மோடியை முழு தேசமும் பின்பற்றுவதாக கூறிய குலாப் தேவி இதைவிட பெரிய அங்கீகாரம் என்ன இருக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.