Kathir News
Begin typing your search above and press return to search.

குஜராத்தில் 22 ஆயிரம் கோடியில் போர் விமான தொழிற்சாலை - பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

குஜராத்தில் 22 ஆயிரம் கோடி மதிப்பிலான போர் விமான தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

குஜராத்தில் 22 ஆயிரம் கோடியில் போர் விமான தொழிற்சாலை - பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

KarthigaBy : Karthiga

  |  31 Oct 2022 5:30 AM GMT

பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிற குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பை எந்த நேரத்திலும் தேர்தல் கமிஷன் வெளியிடும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த தருணத்தில் இந்த மாநிலத்தில் வதோதரா நகரத்தில் இந்திய விமானப்படைக்கு தேவையான சி - 295 ரக போர் விமானங்களை தயாரிக்கும் தொழிற்சாலையை 21,935 கோடியில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் விமானங்களை ஐரோப்பாவின் முன்னணி நிறுவனமான ஏர்பஸ் நிறுவனமும் டாடா குழுமமும் இணைந்து தயாரிக்க உள்ளன. இங்கு தயாரிக்கப்படுகின்ற போர் விமானங்கள் இந்திய விமான படைக்கு வழங்கப்படுவதோடு ஏற்றுமதியும் செய்யப்படும். ஐரோப்பாவுக்கு வெளியே இந்த சி-295 விமானம் தயாரிக்கப்பட போவது இதுவே முதல் முறையாகும். இந்த விமான தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. ராணுவ மந்திரி ராஜநாத்சிங் சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோர் முன்னிலையில் நடந்த விழாவில் பிரதமர் மோடி இந்த தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நாட்டினார்.இந்த விழாவில் பேசுகையில் பிரதமர் மோடி கூறியதாவது :-


உலகின் உற்பத்தி மையமாக உருவாகும் இலக்கை நோக்கி ஒரு பெரிய நடவடிக்கையை இன்றைக்கு நாங்கள் எடுத்திருக்கிறோம். இந்தியா போர் விமானங்களையும், தாங்கிகளையும், நீர்மூழ்கி கப்பல்களையும், மருந்துகளையும் , தடுப்பூசிகளையும், மின்னணு சாதனங்களையும், செல்போன்களையும் , கார்களையும் தயாரிக்கின்றன. அவை பல நாடுகளில் பிரபலமாக உள்ளன இந்தியாவில் தயாரிப்போம்.உலகத்துக்காக தயாரிப்போம் என்ற தாரக மந்திரத்துடன் முன்னோக்கி நடைபோடுகிறோம். தற்போது இந்தியா உலகின் மாபெரும் போக்குவரத்து விமான உற்பத்தியாளராக வருகிறது. எதிர்காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்ற பெருமைமிக்க வார்த்தைகளுடன் இந்தியா மிகப்பெரிய பயணிகள் விமானங்களை தயாரிக்கும். இன்றைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள இந்த தொழிற்சாலை நாட்டின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விமானத்துறையை மாற்றியமைக்கும் வலிமையை கொண்டிருக்கிறது. இந்தியா பாதுகாப்பு துறையில் மிகப்பெரிய முதலீடு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இங்கு தயாரிக்கப்படுகிற போக்குவரத்து விமானங்கள் நமது பாதுகாப்பு படைகளுக்கு வலிமையை தருவதோடு மட்டுமல்லாமல் விமான தயாரிப்பில் புதிய சுற்றுச்சூழல் அமைப்பு உருவாக்கவும் உதவும். கலாச்சாரமயமாக, கல்வி மையமாக திகழ்கிற புகழ்பெற்ற வதோதரா விமானத்துறை மையமாக ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கும்.


இந்த தொழிற்சாலைக்கு எதிர்காலத்தில் பிற நாடுகளிடமிருந்து ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைக்கும் என்பதால் "இந்தியாவில் தயாரிப்போம் உலகுக்காக தயாரிப்போம்" என்ற உறுதிமொழி இந்த மண்ணுக்கு ஒரு பெரிய உந்துதலை பெற்று தரும்.விமான போக்குவரத்தில் உலகின் மூன்று முன்னணி நாடுகளில் ஒன்றாக நாம் நுழைய போகிறோம். இந்தியாவுக்கு அடுத்த 15 ஆண்டுகளில் 2000-க்கும் அதிகமான விமானங்கள் தேவைப்படுகின்றன. இந்த இலக்கை நோக்கி இந்த ஆலையை நிறுவ அடிக்கல் நாட்டு இருப்பது ஒரு முக்கிய படியாகும் இதற்கான ஆயத்தங்களை ஏற்கனவே இந்தியா தொடங்கிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


இந்த விழாவில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பேசுகையில் சி2 95 போக்குவரத்து விமான உற்பத்தி தொழிற்சாலையை நிறுவுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு இருப்பது ராணுவ தளவாடத் துறையில் தன்னிறைவை நோக்கிய நாட்டின் பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமையும் என தெரிவித்தார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News