Kathir News
Begin typing your search above and press return to search.

பிரக்னானந்தா குடும்பத்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

பிரக்னானந்தாவை அவரது குடும்பத்தினருடன் சந்தித்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

பிரக்னானந்தா குடும்பத்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

KarthigaBy : Karthiga

  |  2 Sep 2023 6:30 AM GMT

சமீபத்தில் அஜர்பைஜான் நாட்டில் நடந்த உலகக்கோப்பை செஸ் போட்டியில் இந்திய இளம் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த நம்பர் ஒன் வீரர் நார்வேயின் காரல்செனிடம் டடைபிரேக்கரில் போராடி தோல்வி அடைந்தார். இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கிய 18 வயதான பிரக்யானந்தாவுக்கு சென்னையில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.


முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு 30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். இந்த நிலையில் பிரக்ஞானந்தா தனது பெற்றோர் ரமேஷ் பாபு , நாகலட்சுமி ஆகியோருடன் டெல்லி சென்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவரிடம் செஸ் போட்டி குறித்த விவரங்களை பிரதமர் ஆர்வமுடன் கேட்டறிந்தார். பின்னர் பிரக்ஞானந்தா, "பிரதமரை சந்தித்து பேசியது மிகப்பெரிய கௌரவம். என்னையும் எனது பெற்றோரையும் ஊக்கப்படுத்தும் விதமாக பேசிய பிரதமருக்கு நன்றி" என்று கூறினார் .


பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில், " பிரக்யானந்தாவை அவரது குடும்பத்தினருடன் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆர்வம் மற்றும் விடாமுயற்சிக்கு நீங்கள் உதாரணம். இந்திய இளைஞர்களால் எந்த களத்தையும் கைப்பற்ற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறீர்கள் .உங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்" என்று பாராட்டியுள்ளார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News