Kathir News
Begin typing your search above and press return to search.

நாட்டின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைப்பவர் பிரதமர் மோடி - சரத்குமார்!

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி கடுமையாக உழைக்கிறார் என்று நடிகர் சரத்குமார் கூறினார்.

நாட்டின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைப்பவர் பிரதமர் மோடி - சரத்குமார்!

KarthigaBy : Karthiga

  |  25 March 2024 8:23 AM GMT

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பா.ஜனதா வேட்பாளர் ராதிகா சரத்குமார் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் நடிகர் சரத்குமார் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-

விருதுநகர் நாடாளுமன்ற தேர்தலில் பா ஜனதாவினர் பூத் கமிட்டியில் தொடங்கி அனைத்து தரப்பினரும் கடுமையாக உழைக்கின்றனர். மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்ற நோக்கத்தில் இவர்கள் உத்வேகத்துடன் செயல்பட்டு வருவது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாடு நன்றாக இருந்தால்தான் வருங்கால சமுதாயம் நன்றாக இருக்கும். கடந்த 50 ஆண்டுகால ஆட்சியின் காரணமாக தற்போதைய சமுதாயம் போதைக்கு அடிமையாகி சீரழிந்து கிடக்கிறது. அதிலிருந்து நாட்டை மீட்டு வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் வகையில் பிரதமர் மோடி தொலைநோக்கு திட்டத்தை வகுத்து செயல்படுத்தி வருகிறார். இதற்காக கடுமையாக உழைக்கிறார் .

மீண்டும் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தவுடன் அடுத்த 100 நாட்களில் என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு பணியாற்றி வருகிறார். இந்தியா கூட்டணியை பொறுத்தவரையில் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதே தெரியவில்லை என்பதை வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? யாரை நம்பி இந்த நாட்டை ஒப்படைக்க போகிறோம் என்று அறிய வேண்டாமா? அதற்கான பதிலையே இந்தியா கூட்டணியினர் சொல்லவில்லை.

தற்போது உலக அளவில் பேசக்கூடிய தலைவராக மோடி திகழ்ந்து வருகிறார். பொருளாதார அடிப்படையில் இந்தியாவின் முன்னேற்றத்தை கண்டு உலக நாடுகளில் வியக்கின்றன. கடந்த காலங்களில் திமுக ஆட்சி அமைப்பதற்கு கடுமையாக உழைத்தேன். கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் பா.ஜனதா கைப்பற்றும். வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமர் ஆவார் .இவ்வாறு அவர் பேசினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News