Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடி 30 - ஆம் தேதி அமீரகம் பயணம் : ஐ.நா பருவநிலை மாற்றம் மாநாட்டில் பங்கேற்பு!

ஐ.நா பருவநிலை மாற்றம் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகிற 30-ஆம் தேதி அமீரகம் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரதமர் மோடி 30 - ஆம் தேதி அமீரகம் பயணம் : ஐ.நா பருவநிலை மாற்றம் மாநாட்டில் பங்கேற்பு!

KarthigaBy : Karthiga

  |  25 Nov 2023 7:45 AM GMT

ஐ.நா பருவநிலை மாற்ற மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் வருகிற 30-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 12-ஆம் தேதி வரை நடக்கிறது. இதன் முக்கிய நிகழ்வான உலக பருவநிலை செயல்பாட்டு உச்சி மாநாடு டிசம்பர் 1 மற்றும் இரண்டாம் தேதிகளில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகிற 30-ஆம் தேதி அமீரகம் செல்கிறார்.


அங்கு உலக பருவநிலை செயல்பாட்டு உச்சி மாநாட்டில் மறுநாள் உரை நிகழ்த்துகிறார். பின்னர் அன்றைய தினமே அவர் நாடு திரும்புவார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த மாநாட்டின் கலந்தாய்வு அமர்வுகளில் மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பூபேந்திந்திர யாதவ் தலைமையிலான உயர்மட்ட குழுவும் பங்கேற்க இருக்கிறது.


குறிப்பாக பருவநிலை இலக்குகள், கார்பன் உமிழ்வு குறைப்பு, பருவநிலை தாக்கங்கள் உள்ளிட்ட தலைப்புகளில் நடைபெறும் விவாதங்களில் இந்த குழுவினர் பங்கேற்க இருக்கின்றனர்.இந்த மாநாட்டில் வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு காலநிலை பாதிப்புகளுக்கு நிதி உதவியை எவ்வாறு வழங்குவது ?மற்றும் நிதி உதவி ஆகியவற்றை பற்றிய பரபரப்பான விவாதங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News