Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் நரேந்திர மோடி கட்சியை நடத்திச் செல்லும் விதமும் அவரது சிறப்பான ஆட்சியும் - இதுதான் மோடி மேஜிக்!

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் இருக்கும் சிறப்புகளும் அவர் கட்சியை நடத்திச் செல்லும் விதமும் மோடியை வெகுவாக பாராட்ட வைக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி கட்சியை நடத்திச் செல்லும் விதமும் அவரது சிறப்பான ஆட்சியும் - இதுதான் மோடி மேஜிக்!

KarthigaBy : Karthiga

  |  21 Dec 2023 5:30 AM GMT

நரேந்திர மோடி ஆட்சியையும் கட்சியையும் நடத்தி செல்லும் விதம் மிகவும் வித்தியாசமானது. இதுதான் மோடி மேஜிக் என்று சொல்லும் வகையில் தன்னுடைய முத்திரையை பதித்து வருகிறார். இப்படித்தான் செய்யப் போகிறார். இப்படித்தான் முடிவெடுப்பார் என்று யாரும் அறுதியிட்டு சொல்ல முடியாது . அவர் மத்திய மந்திரிகளையோ, பா.ஜ.க முதல் மந்திரிகளையோ தேர்ந்தெடுக்கும் போது சாதியை பார்ப்பதில்லை.


மராட்டியத்துக்கு முதல் மந்திரியாக அவர் தேவேந்திர பட்னாவிசை தேர்ந்தெடுத்தார் . அவர் ஒரு நாக்பூர் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர். மராட்டியர்கள் பெரும்பான்மையாக உள்ள மராட்டியத்தில் ஒரு பிராமணரை தேர்ந்தெடுத்தார். அரியானா முதல்மரியாக பஞ்சாபை சேர்ந்த ஆர். எஸ்.எஸ் தொண்டரான முதல் முறை எம்எல்ஏவாக தேர்தலில் வெற்றி பெற்ற மனோகர்லால் கட்டாரை தேர்ந்தெடுத்தார் . உத்திரபிரதேசத்தில் எம்.எல்.ஏ.வாக இல்லாத யோகி ஆதித்யநாத்தை கடைசி நேரத்தில் முதல் மந்திரி ஆக்கினார்.


குஜராத்தில் கூட முதல் மந்திரியாக இருந்த ஆனந்தி பெண்பட்டேலை உத்தர பிரதேச கவர்னராகப் பிறகு அவர் சார்ந்த பட்டேல் பட்டேல் சமுதாயத்தினர் புதிய முதல் மந்திரியாக வரவில்லை. யாரும் எதிர்பாராதவாறு ஜைன சமுதாயத்தைச் சேர்ந்த விஜய் ரூபானி முதல் மந்திரி ஆக்கப்பட்டார். இது குஜராத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இப்போது நாட்டில் 12 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. 12 முதல் மந்திரிகளில் ஒருவர் மட்டும் பிராமணர் இரண்டு பேர் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் .ஒருவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் மீதமுள்ளவர்கள் பொதுப் பட்டியலில் உள்ள உயர் ஜாதியினர்.


பெண்கள் ஆதரவு அதிகம் உள்ள பாஜகவில் பெண் முதல்மந்திரிகள் யாரும் இல்லை என்பது எந்தவித சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. சமீபத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் , சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இந்த மாநிலங்களில் முதல் மந்திரி வேட்பாளர்கள் பெயர் எதுவும் அறிவிக்கப்படாவிட்டாலும் மக்கள் மனதில் பிரதமர் நரேந்திர மோடியை வைத்து வாக்களித்தனர்.


தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ராஜஸ்தானில் இருமுறை முதல் மந்திரியாக இருந்த ராஜ குடும்பத்தைச் சேர்ந்த வசுந்தரா ராஜே சிந்தியாவும் மத்திய பிரதேசத்தில் நான்கு முறை முதல் மந்திரியாக இருந்த சிவராஜ் சிங் சவுகானும் சதீஷ் காரில் மூன்று முறை முதல் மந்திரியாக இருந்த ரமன் சிங்கும் முதல் மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் என்று நாடே எதிர்பார்த்தது. ஆனால் நாடு போட்ட கணக்கு ஒன்று மோடியின் கணக்கு மற்றொன்று என்பது போல ராஜஸ்தானில் ராஜ்புத் சமுதாயத்தைச் சேர்ந்தவர் இல்லாமல் இந்தி பேசும் மாநிலங்களில் முதல்முறையாக பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த பஜன்லால் சர்மா பாஜக முதல் மந்திரியாக பதவி ஏற்றுள்ளார்.


மத்திய பிரதேசத்தில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மோகன் யாதவ் பெயர் சிவராஜ் சிங் சவுக்கானால் முன்மொழியப்பட்டது. தன் தந்தையின் டீ-பஜ்ஜி கடையில் அவருக்கு உதவியாக தன் இளமைக்காலத்தில் பணியாற்றிய மோகன் யாதவ் இன்று மத்திய பிரதேச முதல் மந்திரியாக பதவியேற்றுள்ளார். இதுபோல் சதீஷ்காரில் முதல் மந்திரியாக இதுவரையில் மாநிலத்தில் இல்லாத வகையில் முதல் முறையாக மலைவாழ் சமுதாயத்தைச் சேர்ந்த விஷ்ணு டியோ சாய் முதல் மந்திரி ஆகியிருக்கிறார்.


இந்த மூன்று மாநிலங்களிலும் உத்தர பிரதேசத்தை போல தலா இரண்டு துணை முதல் மந்திரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நரேந்திர மோடி செய்வது தான் தேர்வு. யாரும் எதிர்பார்க்காதவர்களை எந்த பதிவிக்கும் தேர்வு செய்ய அவரால் முடியும் .அதை எல்லோரும் மனதார ஏற்றுக் கொள்வார்கள் என்பதை இந்த மூன்று மாநிலங்களிலும் நடந்த முதல் மந்திரிகள், துணை முதல் மந்திரிகள் தேர்வு நிரூபித்து காட்டியுள்ளது இதுதான் மோடி மேஜிக்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News