Kathir News
Begin typing your search above and press return to search.

23 வருடங்களாக வசித்து வந்த அரசு பங்களாவைக் காலி செய்த பிரியங்கா காந்தி வத்ரா.!

ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கு மேல் அவர் அங்கு தங்கியிருந்தால் அபராதம் விதிக்கப்பட்டிருக்கும்.

23 வருடங்களாக வசித்து வந்த அரசு பங்களாவைக் காலி செய்த பிரியங்கா காந்தி வத்ரா.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 July 2020 1:26 PM GMT

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா, லுடியன்ஸ் டெல்லியில் தான் வசித்து வந்த அரசாங்க பங்களாவை காலி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட ஒரு மாதம் கழித்து, இன்று (ஜூலை 30) அரசு பங்களாவைக் காலி செய்தார். ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கு மேல் அவர் அங்கு தங்கியிருந்தால் அபராதம் விதிக்கப்பட்டிருக்கும்.

கடந்த 23 ஆண்டுகளாக அவர் தங்கியிருந்த 35, லோதி எஸ்டேட் பங்களாவிற்கான வாடகை பாக்கியை ஆன்லைனில் பிரியங்கா காந்தி சமீபத்தில் செலுத்தியிருந்தார். ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி பிரியங்காவிற்கு ₹3,46,677 நிலுவைத் தொகை இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமதி வாத்ரா தனது அரசு இல்லத்திற்கு கிட்டத்தட்ட ஒரு வருடமாக வாடகை செலுத்தவில்லை.

அதைத் தொடர்ந்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, "சக்திவாய்ந்த காங்கிரஸ் தலைவர்" ஒருவர், பிரியங்கா வத்ரா தொடர்ந்து அங்கு வசிக்க, பங்களாவை மற்றொரு காங்கிரஸ் எம்.பி.க்கு ஒதுக்குமாறு கோரியதாகக் கூறினார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா, கடந்த ஆண்டு நவம்பரில் SPG கவர் அகற்றப்பட்ட போதிலும், அரசு பங்களாவை காலி செய்யாமல் இருந்தார். பிரியங்கா காந்தி வாத்ராவுக்கு இந்திய அரசு வழங்கிய தனது பங்களாவை காலி செய்ய ஜூலை 1ல் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அவர் SPG பாதுகாப்பில் இருந்ததால் அவருக்கு பங்களா ஒதுக்கப்பட்டது. கடந்த 23 ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ள பங்களாவை காலி செய்ய ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு நவம்பரில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது குழந்தைகள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வாத்ரா ஆகியோருக்கு வழங்கப்பட்ட SPG பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டு CRPF பாதுகாப்பாக மாற்றப்பட்டது. எஸ்பிஜி, உள்துறை அமைச்சகம் மற்றும் அமைச்சரவை செயலகத்தின் பரிந்துரையின் பேரில் பிரியங்கா காந்தி வத்ரா என்ற தனியார் குடிமகனுக்கு பிப்ரவரி 1997-இல் வகை VI பங்களா ஒதுக்கப்பட்டது. பிரியங்கா, ஒரு அரசு ஊழியர் அல்லது அரசாங்க அதிகாரி அல்லது பாராளுமன்றம் அல்லது சட்டமன்ற உறுப்பினர் அல்ல என்றாலும் அரசாங்க பங்களாவில் தொடர்ந்து தங்கியிருந்தார்.

2002-ஆம் ஆண்டில், அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு இருந்தபோது, ​​பிரியங்கா காந்தி வாத்ரா தனது தங்குமிடத்தை தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. லுடியன்ஸ் டெல்லியில் உள்ள தனது 2,765.18 சதுர மீட்டர் வீட்டிற்கான மாத வாடகையை ₹53,421-லிருந்து ₹8,888 ஆகக் குறைக்க அரசாங்கத்தை சம்மதிக்க வைத்தார். இது 83% குறைப்பு!

1997-ஆம் ஆண்டில் இந்த வீடு முதலில் பிரியங்கா வாத்ராவுக்கு வழங்கப்பட்டபோது, ​​அதன் வாடகை மாதத்திற்கு ₹19,900 ஆக இருந்தது, இந்த நேரத்தில் சந்தை விகிதத்தின்படி. விகிதம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது, ஆனால் வாடகையை செலுத்த முடியாமல் இருப்பதைக் காரணம் காட்டி அவர் வீதத்தைக் குறைக்துக் கொண்டார். மேலும் முழு பங்களாவையும் தான் பயன்படுத்தவில்லை என்றும், SPG படைகளும் அங்கே தங்கியிருந்ததாகவும் வாதிட்டார்!

Next Story
கதிர் தொகுப்பு
Trending News