Kathir News
Begin typing your search above and press return to search.

இன்று துவங்கும் கவுண்டவுன்! 3 செயற்கைக் கோள்களை ஏவும் இஸ்ரோ - அவற்றின் சிறப்பு என்ன தெரியுமா?

3 செயற்கைக் கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி சி 53 ரக ஏவுகணை.

இன்று துவங்கும் கவுண்டவுன்! 3 செயற்கைக் கோள்களை ஏவும் இஸ்ரோ - அவற்றின் சிறப்பு என்ன தெரியுமா?

Mohan RajBy : Mohan Raj

  |  29 Jun 2022 10:55 AM GMT

3 செயற்கைக் கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி சி 53 ரக ஏவுகணை.

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு நாட்டின் பாதுகாப்பு, தொலை தொடர்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட ஆய்வு பணிகளுக்கு பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி வகையை ராக்கெட் வாயிலாக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்திலிருந்து சிங்கப்பூர் நாட்டிற்கு சொந்தமான டி.எஸ்.இ.ஓ உட்பட 3 செயற்கை கோள்கள் பி.எஸ்.எல்.வி சி 53 ராக்கெட் ஏவுகணை நாளை மாலை 6 மணிக்கு ஏவப்பட உள்ளது. இதற்காக 25 மணி நேர கவுண்டன் இன்று மாலை 5 மணிக்கு துவங்குகிறது.

சிங்கப்பூரைச் சேர்ந்த மூன்று செயற்கைக்கோள்களில் முதன்மையானதாக டி.எஸ்.இ.ஓ செயற்கைக்கோள் 365 கிலோ எடை உடையது இது தெளிவாக வண்ண புகைப்படங்களை எடுக்கும் திறன் உடையது.

அடுத்தபடியாக 155 கிலோ எடை உடைய நியூசர் செயற்கைக்கோள் இரவு பகல் என அனைத்து வானிலை விவரங்கள் மற்றும் புவியை துல்லியமாக படம் எடுக்கும். சிங்கப்பூரை சேர்ந்த நன்யன் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர் வடிவமைத்த 2.8 கிலோ எடை உடைய ஸ்கூப் ஒன் செயற்கைக்கோள் கல்வி பணிகளுக்காக அனுப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.



Source - Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News