'ஆஹான் வந்துடுச்சு' - 52 வயதில் தன் திருமணம் பற்றி மனம் திறந்த ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி யூடியூப் சேனல் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
By : Karthiga
ராகுல் காந்தியின் பாட்டியும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியை பற்றி குறிப்பிடுகையில் என் வாழ்வின் அன்பு, எனது இரண்டாம் தாய் என பாசத்துடன் உருகினார். அப்போது அவரிடம் அப்படிப்பட்ட ஒரு பெண்ணுடன் நீங்கள் வாழ்வில் சேர்வீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் இது ஒரு சுவாரசியமான கேள்வி நான் ஒரு பெண்ணையே விரும்புவேன். அவரது குண நலன்கள் பற்றி எல்லாம் நான் கவலைப்பட மாட்டேன். ஆனால் அந்த பெண் என் அம்மா மற்றும் என் பாட்டியின் குண நலன்கள் கலந்து இருந்தால் நல்லது என பதில் அளித்தார். அவரது எதிர்பார்ப்பாளர்கள் பல்வேறு பெயர்களை வைத்து அவரை அழைப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராகுல் காந்தி நான் அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டேன் நீங்கள் என்ன சொல்ல விரும்பினாலும் அது பற்றி கவலை இல்லை.
நான் யாரையும் வெறுக்க மாட்டேன் நீங்கள் என்னை தவறாக நடத்தலாம் ஏன் என்னை அடிக்கவும் செய்யலாம். நான் உங்களை வெறுக்க மாட்டேன் என்னை பப்பு என்று அழைக்கிறார்கள் என்றால் அது ஒரு பிரச்சாரம் அவர்கள் தங்களுக்குள் இருக்கிற பயத்தால் அப்படி சொல்கிறார்கள். நீங்கள் எனக்கு இன்னும் பல பெயர்களை வைக்கலாம். நான் கவலைப்படவில்லை. நான் நிம்மதியாகவே இருக்கிறேன். என பதில் அளித்தார்.