Kathir News
Begin typing your search above and press return to search.

ரேஷன் கடையில் வைஃபை கொண்டு வரப்போகும் மத்திய அரசு - எப்பொழுது தெரியுமா?

ரேஷன் கடையில் கூட்டம் கூடுவதற்கான வாய்ப்பு கிடையாது வரப்போகும் வைபை சிஸ்டம்.

ரேஷன் கடையில் வைஃபை கொண்டு வரப்போகும் மத்திய அரசு - எப்பொழுது தெரியுமா?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  5 July 2022 2:25 AM GMT

இந்தியா முழுவதும் உள்ள ரேஷன் கடையில் மக்களுக்கு இணையதள சேவை வழங்கும் திட்டத்தை விரைவில் மத்திய அரசு செயல்படுத்த இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. மேலும் மத்திய அரசு தற்போது புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள பிஎம் வாணி எனும் திட்டத்தின் கீழ் இணையதள சேவைகளின் மூலம் மக்களுக்கு பொருட்களை வழங்குவதன் முக்கிய நோக்கமாக செயல்பட உள்ளது. பொதுவாக தற்போது உள்ள குடும்பத்தில் நான்கு நபர்கள் வரை இருக்கிறார்கள். அவர்களிடம் 6 செல்போன் எண்கள் ஆவது இடம் பெற்றுவிடுகிறது.


நகர்ப்புறங்களில் இருக்கின்ற பெரும்பாலான மக்கள் தற்போது இணையதளத்தில் பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்கிறார்கள். குறிப்பாக வாட்ஸ்அப் ஜிபி போன்ற ஆன்லைன் செய்திகளை பயன்படுத்தி தங்களுக்கு தேவையானவற்றை செய்து கொள்கிறார்கள். ஆனால் கிராமத்தில் உள்ளவர்களுக்கு இத்தகைய வசதி கிடைப்பது இல்லை. எனவே கிராமப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் வைபை வசதி களை கொண்டு வருவதன் மூலமாக பொது சேவை மையம் செயல்படுத்த உள்ளது.


தமிழகத்தில் மொத்தமாக ரேஷன் கடைகள் 35 ஆயிரம் குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் வசிக்கும் இடத்திற்கு இரண்டு கிலோ மீட்டருக்குள் ரேஷன் கடைகள் அமைந்திருப்பது வழக்கம். PM வாணி திட்டத்தின் கீழ் மத்திய அரசின் இணையதள சேவை வழங்கும் மையம் தற்போது மாறாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News