Kathir News
Begin typing your search above and press return to search.

தகாத முறையில் தொல்லை கொடுத்த மத போதகர் அடித்துக் கொலை - பெண் பரபரப்பு வாக்குமூலம்!

தனக்கு அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுத்ததாக மத போதகர் ஒருவரை அடித்து கொன்றுவிட்டு பெண் ஒருவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தகாத முறையில் தொல்லை கொடுத்த மத போதகர் அடித்துக் கொலை - பெண் பரபரப்பு வாக்குமூலம்!

KarthigaBy : Karthiga

  |  8 Dec 2023 6:45 AM GMT

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம், மாத்தூர் அருகே மண்டையூர் முருகன் கோவில் எதிரே தனியார் திருமண மண்டபம் ஒன்று உள்ளது. இதன் எதிரே கடலூர் மாவட்டம் பெண்ணாடம் தாலுகா சோழன் நகர் பகுதியைச் சேர்ந்த வீராசாமி என்கிற டேனியல் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார் . அவர் மாத்தூர் மண்டையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மாலை நேரங்களில் சென்று கிறிஸ்தவ பாடல்களை பாடி மத போதனையில் ஈடுபட்டு வந்தார்.


இந்த நிலையில் டேனியலுக்கு மாத்தூர் விவேகானந்தர் நகரை சேர்ந்த சங்கர் மனைவி செல்வி என்கிற பிரின்சி அறிமுகமாகியுள்ளார். அப்போது டேனியல் தான் தனியாக தங்கி இருப்பதாகவும் தனக்கு சமையல் மற்றும் வீட்டு வேலை செய்வதற்கு ஆள் ஒருவர் தேவை என்றும் கூறியுள்ளார். அதற்கு சம்மதம் தெரிவித்து செல்வி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு டேனியல் வீட்டிற்கு சென்று தங்கி அங்கு வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல டேனியல் மத போதனை செய்ய சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து உணவருந்தி விட்டு வீட்டில் இருந்தார்.


நேற்று காலை ஆறு மணி அளவில் டேனியல் வீட்டின் வாசலில் செல்வி அழுது கொண்டு அமர்ந்திருந்தார்.இதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் என்ன என்று விசாரித்த போது மத போதகர் டேனியலை தான் கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து கீரனூர் போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து சென்றனர். பின்னர் கொலை செய்யப்பட்டு கிடந்த டேனியல் உடலை பார்வையிட்டு அங்கிருந்த செல்வியிடம் விசாரணை நடத்தினர்.


அப்போது செல்வி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார் அதில் "மத போதகர் டேனியல் எனக்கு தினமும் செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தார். அதேபோல் நேற்று முன்தினம் இரவும் செக்ஸ் தொல்லை கொடுத்தார். இதனால் அவர் மீது வெறுப்பு ஏற்பட்டு அவரை கீழே தள்ளியதில் மயக்கம் அடைந்தார். அப்போது அவரது வீட்டில் மோட்டார் சைக்கிளில் இருந்து கழற்றி வைக்கப்பட்ட செயின் மாற்றக்கூடிய பகுதியாலௌ முகம் மற்றும் தலையில் அடித்ததில் அவர் இறந்து விட்டார் "என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே டேனியல் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மண்டையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வியை கைது செய்து கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News