அக்னி வீரர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு
அக்னி வீரர்களுக்கு ரயில்வே துறையில் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
By : Karthiga
முப்படைகளில் நான்காண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்வதற்காக 'அக்னிபத்' திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. நான்காண்டுகளுக்கு பிறகு 25% வீரர்கள் மட்டுமே பணியில் நீடிக்கலாம். மற்றவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் .இந்நிலையில் 'அக்னிபத்' திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளை முடித்தவர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு , வயது சலுகை வழங்க ரயில்வே நிர்வாகம் முன்வந்துள்ளது .
லெவல் 1 பணியிடங்களில் 10% இட ஒதுக்கீடும், லெவல் 2 மற்றும் அதற்கு மேற்பட்ட அரசிதழ் பதிவு பெறாத பணியிடங்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடும் அளிக்கப்படும் . மேலும் முதல் பேட்ச் அக்னி வீரர்களுக்கு வயது உச்சவரம்பில் ஐந்து ஆண்டுகளும், அதற்கு அடுத்த பேட்ச் அக்னி வீரர்களுக்கு மூன்று ஆண்டுகளும் வயது தளர்வு அளிக்கப்படும் .உடல் தகுதி தேர்வில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று ரயில்வே வாரியம் கூறியுள்ளது.