Kathir News
Begin typing your search above and press return to search.

அக்னி வீரர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு

அக்னி வீரர்களுக்கு ரயில்வே துறையில் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அக்னி வீரர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு

KarthigaBy : Karthiga

  |  12 May 2023 11:00 AM GMT

முப்படைகளில் நான்காண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்வதற்காக 'அக்னிபத்' திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. நான்காண்டுகளுக்கு பிறகு 25% வீரர்கள் மட்டுமே பணியில் நீடிக்கலாம். மற்றவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் .இந்நிலையில் 'அக்னிபத்' திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளை முடித்தவர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு , வயது சலுகை வழங்க ரயில்வே நிர்வாகம் முன்வந்துள்ளது .

லெவல் 1 பணியிடங்களில் 10% இட ஒதுக்கீடும், லெவல் 2 மற்றும் அதற்கு மேற்பட்ட அரசிதழ் பதிவு பெறாத பணியிடங்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடும் அளிக்கப்படும் . மேலும் முதல் பேட்ச் அக்னி வீரர்களுக்கு வயது உச்சவரம்பில் ஐந்து ஆண்டுகளும், அதற்கு அடுத்த பேட்ச் அக்னி வீரர்களுக்கு மூன்று ஆண்டுகளும் வயது தளர்வு அளிக்கப்படும் .உடல் தகுதி தேர்வில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று ரயில்வே வாரியம் கூறியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News